கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

அதன்படி கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டப்பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக முதல் 3 ஆண்டுகளில் குறுகியகால திட்டமாக 60 துணைதிட்டங்களும், இரண்டாம் கட்டமாக 4 முதல் 8 ஆண்டுகளில் 7 துணைதிட்டங்களும், மூன்றாம் கட்டமாக சீரமைப்புப்பணிகள் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மொத்தமதிப்பு 1,934 கோடியே 84 லட்சம் ரூபாய் ஆகும்.

ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம், கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக் கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தல், கூவம் நதிக் கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக் கான திட்டமிடல், பல்லு யிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி நகர்ப்புறங்களில் நதியின் கரையோரங்களில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

கூவம் நதியின் சீரமைப்பு பணிக்காக மூன்று ஆண்டுகளில் குறுகியகால திட்டமான 60 துணைதிட்டங்களை செயல்படுத்திட தமிழக அரசு 604 கோடியே 77 லட்சம் ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையிலிருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கிலோமீட்டர் நீளமுள்ள கூவம் நதிப்பகுதிகளை சீரமைத்திட 604 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்திற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் கோயம்பேட்டில் நாளொன்றிற்கு 120 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட 87 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சென்னை மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றுவாரியத்திற்கு 19 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 82 அலுவலக கட்டிடங்கள்; சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 58 பணிமனை அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி 20 கோட்ட அலுவலங்களில் 3 கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 78 பொது வரிவசூல் மையங்கள் என மொத்தம் 110 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார்.

சென்னை, மீனம்பாக்கத்தில் சுமார் ஐந்தாயிரம் பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் 59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் மற்றும் 4 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை திட்டப்பணிகள் என மொத்தம் 4 கோடியே 70 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஜெயலலிதா அடிக்கல் நாட்டியும், திறந்தும், தொடங்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 719 கோடியே 67 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories