30 தோப்புக்கரணம் போட்டா… ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ஃப்ரீ… ஃப்ரீ.. ஃப்ரீ.!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

Anand vihar railway station squat machine - 2026
  • முப்பது தோப்புக்கரணம் போட்டால் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ஃப்ரீ.
  • தோப்புக்கரணத்திற்கும் பிளாட்பாரம் டிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு?
  • இலவசமாக எதற்காக தருகிறார்கள்? ஆச்சரியமாக உள்ளதா?

நீங்கள் தில்லியில் உள்ள ஆனந்தவிஹார் டெர்மினல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் பிளாட்பாரம் டிக்கெட்டை தேவையான பணம் கொடுத்து பெற வேண்டியது இல்லை.

ஸ்டேஷனில் உள்ள ஒரு மிஷின் முன்னால் மூன்று நிமிடங்களில் முப்பது தோப்புக்கரணம் போட்டால் போதும். ஃப்ரீயாக பிளாட்பார்ம் டிக்கெட் தரப்படும். நீங்கள் அவ்வாறு தோப்புக்கரணம் போட்டு முடித்தவுடனே மெஷினிலிருந்து பிளாட்பாரம் டிக்கெட் வெளியில் வரும்.

இவ்வாறு எதற்காக செய்கிறார்கள் என்றால் ஃபிட்னஸ்., க்காக. இந்த மிஷின் பெயர் ஃபிட் இண்டியா ஸ்க்வாட் மிஷின். உடல் திறனை ஏற்படுத்துவது – ஃபிட்னஸ் மீது பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய ரயில்வே துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது.

சாதாரணமாக இந்த ஸ்டேஷனில் பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாய். அதை வாங்காமல் பிளாட்பாரத்திற்குள் நுழைந்தால் டிக்கெட் கலெக்டர் கேட்கும் போது கட்டாயமாக டிக்கெட்டை காட்ட வேண்டி வரும். அது இல்லாவிட்டால் ஃபைன் போடுவார்கள். சிறை தண்டனை கூட கிடைக்கும்.

இந்த எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு மூன்று நிமிடங்களில் 30 தோப்புக்கரணங்களை போட்டால் போதும். .ஃப்ரீயாக பிளாட்பாரம் டிக்கெட்டை பெற்றுவிடலாம். இந்த திட்டத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ள போதிலும் சிலர் மக்களை முட்டாள் ஆக்காதீர் என்று கூறி வருகின்றனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிறுவன் 30 முறை தோப்புக்கரணம் போட்டு ரூ.10க்கான பிளாட்பாரம் டிக்கெட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்கிறான்.

ஏற்கெனவே தொலைதூர ரயில்களில் பொதுப்பெட்டியில் துண்டு போட்டு இடம் பிடித்து, அதனை ரூ.20 ரூ.50 என்று விற்று விட்டு, பணம் சம்பாதிக்கும் பலருக்கு அதுவேதான், பிழைப்பாக இருக்கிறது. இப்போது இன்னொரு பிழைக்கும் வழியை ரயில்வே காட்டியிருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஒருவர் ஒரு நாளின் 12 மணி நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் தோப்புக்கரணம் போட்டு குறைந்த பட்சம் 20 டிக்கெட்களைப் பெற்று விற்றால் கூட ரூ.150 வரை சம்பாதிக்கலாம்! அடடே… நல்ல ஐடியதான்!

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img