பிடிபட்ட ஜேப்பிடி திருடர்கள்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்… வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.

மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து அடித்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.

யாருக்கும் தெரியாமல் பிக்பாக்கெட் அடிப்பதாக நினைத்துக்கொண்டு ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் போது இருவர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்ல மண்டலம் போத்தவரம் கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.

சத்தமில்லாமல் ஒருவருடைய பாக்கெட்டிலிருந்து மூவாயிரம் ரூபாயை திருடுவதற்கு முயற்சித்தனர் இரு இளைஞர்கள். ஆனால் ஒரு சிறு சந்தடி அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.

போத்தவரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் வந்து பேச்சுக் கொடுத்தார்கள். அவரைப் பேச்சால் மயக்கி ஏமாற்றி, சரியான நேரம் பார்த்து அவருடைய பாக்கெட்டில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுப்பதற்கு முயற்சித்தார்கள். அதனை கவனித்த உள்ளூர் மக்கள்
அந்த இரு திருடர்களையும் பிடித்து போட்டு அடித்து அதன் பின்பு போலீசாரிடம் ஒப்படைத்தானர். திருடர்கள் இருவரும் தாடேபல்லிகூடத்தை சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img