‘மீம்ஸ்_க்ரியேட்டர்’களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani

nesamani hashtag - 2026மூன்று தலைமுறை தமிழர்களின் ஒரே நகைச்சுவை வடிகால் வடிவேலுதான்! அந்த வடிவேலுவை திரைத்துறையை விட்டு அகற்றி, தமிழ் ரசிகர்களின் சிரிப்பையும் நகைச்சுவை உணர்வையும் சாகடித்த பெருமை திமுக.,வுக்கும் குறிப்பாக அதன் தலைவராக இருந்த கருணாநிதிக்கும் சேரும்!

வடிவேலு என்ற திரைத்துறைக் கலைஞனின் அஸ்தமனம் அரசியல் கலைஞரால் ஏற்பட்ட போதும், சமூக வலைத்தள விழுதுகள் அந்த ஆலமரத்தை இப்போதும் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கணமும் வடிவேலுவின் கதாபாத்திரத்துடன் வெளியாகும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. சொல்லப் போனால், பிரதான ஊடகங்களில் பணியாற்றும் கார்ட்டூனிஸ்ட்களும் ஓவியர்களும் பிரமித்துப் போய் வாய்பிளந்து நிற்கிறார்கள்! நம்மை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் அபார கற்பனை! பல மடங்கு பீட் அடித்து எங்கோ செல்கிறார்களே என்று ஆச்சரியத்தால் அதிசயிக்கிறார்கள்.

இந்த மீம் கிரியேட்டர்களின் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வடிவேலுவின் நேசமணீ! நேசமணிக்கு என்ன ஆச்சு?! இதுதான்!

ஸ்மார்ட் போன் எல்லோர் கைகளிலும் தவழ்கிறது. கற்பனைக்கு உருக் கொடுத்து வடிவேலுவை வடிவம் கொடுத்து உலவ விடுகிறார்கள் இளைய தலைமுறையினர். இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களில் மீம்ஸ் கிரியேட்டர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் உள்ளூர் முதல் உலகத் தலைவர்கள் வரை எவரையும் விட்டு வைப்பது கிடையாது. எந்த நேரம் யார் சிக்குவார்கள் என்பதை கணிப்பதும் சிரமம்தான்!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

vadivelu - 2026மீம்ஸ் கிரியேட்டர்களின் ஹீரோ அல்லது கடவுள்.. நம்ம வடிவேலுதான்! டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ் அனைத்திலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு தனி இடம் உண்டு. சினிமாவில் தலைகாட்டாவிட்டாலும் நெட்டிசன்களால் ஒவ்வொரு கணமும் சமூக வலைதளங்களில் உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

அவரது இன்றைய உலாத்தல்… #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கில்! இது இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் படத்தைப் பதிவிட்டு இதற்கு என்ன பெயர் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் என, ஃப்ரண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி பதிலளித்துள்ளார்.

இதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய்… நேசமணி இட்லி சாப்பிட்டதை சி.ஆர்.சரஸ்வதி புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் என்றும், அவர் மிகவும் விரைவாக குணம் பெற்று வர தீச்சட்டி எடுப்பதாக வேண்டிக் கொண்டிருப்பதாகவும் கூறினார் என ஒரு நிகழ்வியல் உடனான கற்பனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories