என் உடல் என் தேர்வு! இந்தோனெசியா இளப்பெண்கள் ஆர்ப்பாட்டம்!

indonashia - 2026

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. நேற்று அங்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது சட்ட மசோதாவின் முன்வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த சட்ட வரைவில், இந்தோனேஷியா குடிமக்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்னர் ஒருவர் வேறு ஒரு நபருடன் வாழ்ந்தால் 6 மாத காலம் சிறை தண்டனை அளிக்கப்படும்.

நாட்டின்பிரதமர், மதம், அரசு அலுவலகங்கள், தேசியக் கொடி ஆகியவற்றை அவமதிப்பு செய்தால் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். உடல்நலக் கோளாறு அல்லது பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட கருவை தவிர வேறு கருக்கலைப்பு செய்தால் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் போன்ற புதிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
.
இதனால் இந்தோனேஷிய மக்கள் கடுமையாக அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். அதன் விளைவாக ஜகார்தாவில் உள்ள நாடாளுமன்றத்தின் வாயிலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1998 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியாவில் நடக்கும் மாபெரும் போராட்டத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மசோதாவின் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories