ஈகுவடாரில் உள்ள குவிட்டோவை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளார். இவர் இரு பட்டங்களை பெறவுள்ளதை கொண்டாடும் வகையில் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பார்ட்டிக்கு தனது நண்பர்களை அழைத்திருந்தார். அப்போது தனது 35 வயது காதலனையும் அழைத்திருந்தார். பார்ட்டி முடிந்தவுடன் அனைவரும் சென்றனர்.
ஆனால் காதலன் மட்டும் வெளியே செல்லாமல் அந்த பெண்ணின் வீட்டிலேயே இருந்தார்.
குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு இவர்கள் இருவரும் பால்கனிக்கு சென்றனர். அப்போது நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் 3ஆவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
நேரம் நள்ளிரவு என்பதால் யாரும் இதனை உடனே அறியவில்லை. காலை விடிந்தவுடன் வீட்டுக்கு அருகே நிர்வாண நிலையில் ஜோடியின் சடலம் கிடப்பதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றினர்.
இருவரும் பால்கனியிலிருந்து தவறி விழுந்தனரா, இல்லை யாரேனும் தள்ளிவிட்டு கொலை செய்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பெண்ணின் 8 வயது குழந்தை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம்.