கொரோனா தொற்று உள்ளதா? சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி!

korona - 2026

அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியும் மொபைல் செயலியை சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. யாருக்கு எப்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்கிற அளவுக்கு உலக மக்கள் பீதியில் உள்ளனர்.தற்போது வரை சீனாவில் தான் இந்த வைரஸ் பாதிப்பு 99 சதவீதம் ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் கூறியுள்ளது. எனினும், சீனாவை அடுத்துவுள்ள அண்டை நாடுகளில் இதனுடைய தாக்கம் உணரப்பட்டு வருகிறது.

இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலித்துள்ளது. பல்வேறு நாடுகள் சீனாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக நிறுத்துவைத்துள்ளன. பல்வேறு நாடுகளில் சீனப் பயணிகள் அல்லது சீனாவுக்கு சென்று திரும்பிய சொந்த நாட்டினர் பிரவேசிப்பதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

corono 2 - 2026

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவுள்ளது. தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழதுள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் பல்வேறு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதனுடைய பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுப்பிடிக்க முடியாமலும் சீன அரசு திண்டாடி வருகிறது. இதற்கிடையில், பல்வேறு நாட்டிலுள்ள மருத்துவ அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுப்பிடிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு இயல்பான அளவில் இருமல், சளி மற்றும் வறண்ட தொண்டை போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது கணிப்பது கடினம். மேலும், தனக்கு ஏற்பட்டிருப்பது கொரோனா தொற்று என்று தெரியாமலும் நோயாளிகள் பலர் இயல்பாக நடமாடிக் கொண்டிருக்கக்கூடும்.

இதற்கு முடிவு கட்டும் நோக்கில் சீன அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. close condact detector என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த செயலி, அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.

சீனாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த செயலியை கடந்த பிப்-8ம் தேதி வெளியிட்டது. இதை மொபைலில் பதிவிறக்கம் செய்தவுடன், பயன்பாட்டாளரின் செல்போன் எண் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.

அதை தொடர்ந்து பொதுமக்கள் தாராளமாக இந்த செயலியை பயன்படுத்த தொடங்கலாம். அதன்படி மொபைல் செயல் வழியே அருகில் இருப்பவர்களை பார்க்கும் போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் சிவப்பு நிறத்திலும், வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர் நீல நிறத்திலும் தெரிவார்கள் என சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இந்த செயலி நம்பகமாக தகவலை வழங்கி வருவதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த செயலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கண்டறிகிறது என்பது குறித்து சீனா அரசு எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories