யோகா பயிற்சி மத சுதந்திரத்தை மீறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்துவரும் மிகப் பழைமை வாய்ந்த இந்திய யோகக் கலை தற்போது அங்குள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரு பயிற்சிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 5,600 மாணவர்கள் படிக்கும் சாண்டியாகோ கவுண்டி என்சினிடாஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 முறை 30 நிமிட யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ‘யோகா பயிற்சி, இந்து மதம் மற்றும் புத்த மதக் கொள்கைகளை ஊக்குவித்து, கிறிஸ்துவ மதத்துக்கு தடையாக அமைந்துள்ளது’ என்று கூறி, ஸ்டீபன், ஜெனீபர் செட்லாக் மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 4வது மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இது குறித்து நீதிமன்றம் தெரிவித்தபோது, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது அதில் கலிபோர்னியா அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த வகையிலும் மத சுதந்திரம் மீறவில்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரிய உடற்பயிற்சிக்கு மாற்று போலத்தான் யோகா பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. சில வழிகளில் யோகா பயிற்சி மதத்துடன் தொடர்பு உடையதாக இருந்தாலும்கூட அமெரிக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் யோகா பயிற்சி எந்த விதத்திலும் மதம், கடவுளைக் கண்டறியும் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சூழ்ச்சிமுறை போன்ற எதனையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

