கொரோனா: மலைப்பகுதியை தாக்குவதில்லை: ஆய்வாளர்கள்!

hill station

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்குள்ளாக உலகம் முழுவதும் வேகமாக பரவியது. பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூகானுடன் பெரிய அளவில் தொடர்பே இல்லாத அமெரிக்கா உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வூகானுடன் வர்த்தக தொடர்பில் இருந்த திபெத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சுற்றுலா தளமான திபெத் கொரோனா பாதிப்பில் குறைவாக உள்ளது ஆய்வாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் திபெத், ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் நிலப்பகுதிகளில் வாழ்பவர்களை விட மலைப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு கொரோனா தாக்குதல் குறைவாக நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறாக பாதிக்கப்படுபவர்களும் சாதாரணமாக குணமடைய எடுக்கும் நாட்களை விட முன்னதாகவே குணமடைவதும் தெரிய வந்துள்ளது. மலைப்பகுதிகளில் ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைப்பதால் மலைவாழ் மக்கள் உடனடியாக குணமடைவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள வெப்பநிலை, காற்று போன்றவையும் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவிலும் மலைப்பகுதிகளான சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் ஆய்வாளர்களின் கூற்று கிட்டத்தட்ட சரியானதாக இருப்பதாக அறிய முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories