லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த விடுப்பு அறிவிப்பில், பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது. பிரிட்டனில், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு கொடுப்பது போல, தந்தைக்கும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 50 வார விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுப்பை கணவன், மனைவி இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுப்பைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இருவரும் சேர்ந்து தங்கள் அன்பான குழந்தையை ஒருவர் மாற்றி ஒருவர் பராமரிக்கலாம். குழந்தையைத் தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுப்பினை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைப் பிறப்பை மையமாக வைத்து வரும்போது, பெரும்பாலான பெண்களும் தொடர்ந்து வேலையில் இருக்கலாமா அல்லது, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்ற ஒரு கேள்வியைத்தான் முன்வைப்பார்கள். காரணம் பெண்களின் வேலை பறிபோகக் கூடும் என்பதால், ஆனால், இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலையை விட்டு நீக்குவது சட்டவிரோதம் என பிரிட்டன் அரசு சட்டம் இயற்றியிருந்தது. இருப்பினும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்திட்டம், பெண்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை; எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக் கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, அரசு எடுத்துள்ள இம்முடிவு கணவன் மனைவி இருவருக்குமே மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறோம் என அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறியுள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

