லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த விடுப்பு அறிவிப்பில், பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது. பிரிட்டனில், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு கொடுப்பது போல, தந்தைக்கும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 50 வார விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுப்பை கணவன், மனைவி இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுப்பைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இருவரும் சேர்ந்து தங்கள் அன்பான குழந்தையை ஒருவர் மாற்றி ஒருவர் பராமரிக்கலாம். குழந்தையைத் தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுப்பினை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைப் பிறப்பை மையமாக வைத்து வரும்போது, பெரும்பாலான பெண்களும் தொடர்ந்து வேலையில் இருக்கலாமா அல்லது, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்ற ஒரு கேள்வியைத்தான் முன்வைப்பார்கள். காரணம் பெண்களின் வேலை பறிபோகக் கூடும் என்பதால், ஆனால், இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலையை விட்டு நீக்குவது சட்டவிரோதம் என பிரிட்டன் அரசு சட்டம் இயற்றியிருந்தது. இருப்பினும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்திட்டம், பெண்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை; எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக் கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, அரசு எடுத்துள்ள இம்முடிவு கணவன் மனைவி இருவருக்குமே மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறோம் என அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறியுள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

