January 23, 2025, 5:00 AM
23.8 C
Chennai

என் 200க்கு கெய்ல் வாழ்த்தியபோது நகைப்பாக இருந்தது: நியூஸி.யின் குப்டில்

guptil-gayleநான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 163 பந்துகளில் 237 ரன்களை அடித்து சாதனை செய்தார். இதற்கு முன்னர், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 215 ரன் எடுத்தார். அதுதான், உலகக் கோப்பையில் அதிகபட்ச இரட்டைச் சத ரன்னாக இருந்தது. அதனை குப்டில் முறியடித்தார். மார்டின் குப்டில் 200 ரன் எடுத்த போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், குப்டிலின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இது குறித்து குப்டில் பின்னர் கூறியபோது, “கிறிஸ் கெய்ல் என்னிடம், வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீக்குக்கு வரவேற்கிறேன்’ என்றார். எனக்கு அவரது வாழ்த்து மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் அதற்குப் பின்னர் அனைவருமே வாழ்த்து தெரிவிக்கும் நல்லுணர்வில் அவருக்குப் பின் நின்றனர். நான் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு பந்தையும் ஆட வேண்டும் என நினைத்தேன். அவ்வாறே ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வேடிக்கையாக ஆட முயற்சி செய்து, பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டினேன். எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து முழு இன்னிங்க்ஸையும் விளையாட இதமாகத்தான் இருந்தது. எனக்கு அந்த கடைசி நேரத்தில் இரண்டு மூன்று பார்ட்னர்ஷிப் கிடைத்தது, அது 400 ஐ நோக்கி ஸ்கோரை உயர்த்த வழிசெய்தது” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.