என் 200க்கு கெய்ல் வாழ்த்தியபோது நகைப்பாக இருந்தது: நியூஸி.யின் குப்டில்

guptil-gayleநான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 163 பந்துகளில் 237 ரன்களை அடித்து சாதனை செய்தார். இதற்கு முன்னர், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 215 ரன் எடுத்தார். அதுதான், உலகக் கோப்பையில் அதிகபட்ச இரட்டைச் சத ரன்னாக இருந்தது. அதனை குப்டில் முறியடித்தார். மார்டின் குப்டில் 200 ரன் எடுத்த போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், குப்டிலின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இது குறித்து குப்டில் பின்னர் கூறியபோது, “கிறிஸ் கெய்ல் என்னிடம், வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீக்குக்கு வரவேற்கிறேன்’ என்றார். எனக்கு அவரது வாழ்த்து மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் அதற்குப் பின்னர் அனைவருமே வாழ்த்து தெரிவிக்கும் நல்லுணர்வில் அவருக்குப் பின் நின்றனர். நான் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு பந்தையும் ஆட வேண்டும் என நினைத்தேன். அவ்வாறே ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வேடிக்கையாக ஆட முயற்சி செய்து, பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டினேன். எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து முழு இன்னிங்க்ஸையும் விளையாட இதமாகத்தான் இருந்தது. எனக்கு அந்த கடைசி நேரத்தில் இரண்டு மூன்று பார்ட்னர்ஷிப் கிடைத்தது, அது 400 ஐ நோக்கி ஸ்கோரை உயர்த்த வழிசெய்தது” என்று கூறியுள்ளார். ad4b0f606e0f8465bc4c4c170b37e1a3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories