என் 200க்கு கெய்ல் வாழ்த்தியபோது நகைப்பாக இருந்தது: நியூஸி.யின் குப்டில்

guptil-gayleநான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 163 பந்துகளில் 237 ரன்களை அடித்து சாதனை செய்தார். இதற்கு முன்னர், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 215 ரன் எடுத்தார். அதுதான், உலகக் கோப்பையில் அதிகபட்ச இரட்டைச் சத ரன்னாக இருந்தது. அதனை குப்டில் முறியடித்தார். மார்டின் குப்டில் 200 ரன் எடுத்த போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், குப்டிலின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இது குறித்து குப்டில் பின்னர் கூறியபோது, “கிறிஸ் கெய்ல் என்னிடம், வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீக்குக்கு வரவேற்கிறேன்’ என்றார். எனக்கு அவரது வாழ்த்து மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் அதற்குப் பின்னர் அனைவருமே வாழ்த்து தெரிவிக்கும் நல்லுணர்வில் அவருக்குப் பின் நின்றனர். நான் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு பந்தையும் ஆட வேண்டும் என நினைத்தேன். அவ்வாறே ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வேடிக்கையாக ஆட முயற்சி செய்து, பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டினேன். எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து முழு இன்னிங்க்ஸையும் விளையாட இதமாகத்தான் இருந்தது. எனக்கு அந்த கடைசி நேரத்தில் இரண்டு மூன்று பார்ட்னர்ஷிப் கிடைத்தது, அது 400 ஐ நோக்கி ஸ்கோரை உயர்த்த வழிசெய்தது” என்று கூறியுள்ளார். ad4b0f606e0f8465bc4c4c170b37e1a3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories