இந்தோனேசியா: மரண தண்டனை நிறைவேற்றும் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள்

indonesia-australia-bali-nine சிலாகேப் (இந்தோனேசியா) இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலி நைன் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆண்ட்ரூ சான், ஈழத் தமிழரான மயூரன் சுகுமாரன் இருவரும் பாலியின் கேரோபோகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை எழுப்பப் பட்டு, சில நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து அந்தத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை உள்ளூர் நீதி அமைச்சக அதிகாரி நியோமன் புத்ரா சூர்யா கூறியுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட இந்த மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் இரண்டு விமானங்களில் கொண்டு செல்லவுள்ளனர். போராட்டங்கள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவச வாகன ராணுவப் படைப் பிரிவினர் ஆகியோர், பாலியின் கெரோபொகான் சிறைச் சாலைக்கு வெளியில் பாதுகாப்புக்குக் குவிந்திருந்தனர். பாலி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் இருவரும் விமானம் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். கடந்த 2005-ல் இந்தோனேசியாவிலிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடந்த முயன்றதாக ஆண்ட்ரூ சான் மற்றும் சுகுமாரன் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 2006ம் ஆண்டில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் திருந்திவிட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்து, இருவருக்கும் கருணை காட்டுமாறு அரசிடம் கோரினர். அவர்களின் கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார். இந்நிலையில், அவர்களுக்கு அதற்கு மேல் வேறு சட்ட ரீதியான வாய்ப்புகள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள், ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி இந்தோனேசியாவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தோனேசியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களின் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படவுள்ளது. (AFP செய்தியின் அடிப்படையில்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories