உலகக் கோப்பையை வென்று எங்கள் சுழல் மன்னன் வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம் என்று கூறியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம். நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடருடன் வெட்டோரி ஓய்வு பெறப் போவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் கூறும்போது அணியின் வெற்றிக்காக வெட்டோரி பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே உலகக் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பணம் செய்வோம். வெட்டோரியின் கடைசி ஆட்டம் மிகக் கோலாகலமாக இருக்க வேண்டும். முதல் முறையாக வெட்டோரி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் என்பது சிறப்பு என்றார்.
உலகக் கோப்பையை வெட்டோரிக்கு சமர்ப்பணம் செய்வோம்: மெக்கலம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

