February 20, 2026, 5:55 AM
24.5 C
Chennai

பாகிஸ்தான் ஏஜென்ஸிகள் என்னை சித்ரவதை செய்தனர்; ஸ்ரீகிருஷ்ணர் என் கைபிடித்தார் : ஷயான் அலி!

anti convert man via iskcon - 2026
#image_title

பாகிஸ்தான் ஏஜென்சிகள் என்னை சித்திரவதை செய்தனர், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் என் கையைப் பிடித்தார்’ என்று, சமூக ஊடக செல்வாக்கு மிக்க முகமது ஷயான் அலி என்பவர், கர்வாப்ஸி எனும் தாய்மதம் திரும்புதலை டிவிட்டரில் அறிவித்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சனாதன தர்மத்திற்குத் திரும்பிய பாகிஸ்தானியர் முஹம்மத் ஷாயன் அலி – பிறப்பால் பாகிஸ்தானி, மனத்தால் பாரத்வாசி, விதி வசத்தால் அமெரிக்க வாசி (லாஸ்சேஞ்சல்ஸ்)!

இவருடைய முன்னோர்கள் பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. போன்றவை இவர் மீது சந்தேகம் கொண்டு (ரா & யஹுதி ஏஜெண்ட் என்று சந்தேகம்) விசாரணை என்ற பெயரில் பெரிய அளவில் சித்திரவதை செய்ததால் அந்நாட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.

பாகிஸ்தான் உளவத்துறையின் சித்திரவதையால் மனமொடிந்து விரக்தியில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று இருந்த போது, ஶ்ரீ கிருஷ்ணர் என் கரம் பிடித்து எனக்கு நம்பிக்கை அளித்தார் என்கிறார் முஹம்மத் ஷாயன் அலி. என்னைக் கைவிட்டுவிடாத இஸ்கான் அமைப்புக்கும் நன்றி என்று அவர் தெரிவிக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவு….

கடந்த 2 வருடங்களாக எனது முன்னோர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை கவனித்த பிறகு, இன்று எனது “கர் வாப்சி”யை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

என்னை ஒருபோதும் கைவிடாத இஸ்கானுக்கு நன்றி

பாகிஸ்தான் ஏஜென்சிகளின் சித்ரவதையால் 2019-ல் பாகிஸ்தானை விட்டு வெளியேற நேரிட்ட பிறகு, மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். ஆனால் ‘கிருஷ்ணர்’ என் கையைப் பிடித்தார். இப்போது அதைத் திருப்பிக் கொடுத்து என் முன்னோர்களைப் பெருமைப்படுத்த வேண்டிய நேரம் இது.

நான் மிக விரைவில் எனது தாயகத்திற்குச் செல்வேன். எனது தாத்தா பாட்டி மற்றும் எனது முன்னோர்கள் அனைவரும் பிறந்து வளர்ந்த, எனது சொந்த “மண்” மற்றும் “மக்கள்” ஆகியவற்றில் என்னை இணைத்துக் கொள்வேன், ஏனெனில், இறுதியில்:
“வீடு என்றால் அது வீடு தான்”

ஒரு சனாதனியாக, நான் வேறு எந்த மதத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியில் ஈடுபடமாட்டேன் என்பதை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன், நீங்கள் என்னுடையதை மதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நபரும் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்று என் கீதை எனக்குக் கற்பிக்கிறது!

இந்தச் சிறப்பு நாளில், என் வாழ்நாளில் யாரையாவது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ காயப்படுத்தியிருந்தால், நான் அவர்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன். ஏனென்றால் மக்களை காயப்படுத்துவதன் மூலம் என் வாழ்க்கையில் இந்த அழகான பயணத்தை தொடங்க விரும்பவில்லை.

இன்று, என் வேர்களுக்குத் திரும்பி வந்ததற்காக என்னைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் என் முன்னோர்களும் அதையே உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்

உங்கள் அனைவருக்கும் என் அன்பை அளிக்கிறேன்

ஹரே கிருஷ்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories