சீனா தயாரித்த உயிரி ஆயுதம்தான் ‘கொரோனா வைரஸ்’!

Published:

covid man made andrew huff - 2026

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து மக்கள் பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு ”உயிரி ஆயுதம்’ என வூஹான் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்த தகவல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 இறுதியில் சீனாவின் வூஹானில் மனிதர்களிடம் ‘கோவிட்-19’ என்னும் கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டது. பின் சீனா மட்டுமின்றி அந்த வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும்பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளிப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இதனால் சீனா இந்த வைரஸை உயிரி ஆயுதமாக பயன்படுத்த உருவாக்கி இருக்கலாம் என்று கருதப் பட்டது. இது குறித்து இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய பெண் ஒருவரே இது பற்றி வெளிப்படையாகத் தகவல் சொன்னார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்நிலையில் சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த பிரத்யேக தகவல் மற்றும் நுண்ணறிவுகளை வழங்கும் சர்வதேச செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரும், சீனாவில் பிறந்த மனித உரிமை ஆர்வலருமான ஜெனிபர் ஜெங், வூஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ என்பவரிடம் ஒரு பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சாவோ ஷாவோ வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பேட்டியில் சாவோ ஷாவோ கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் ஓர் ‘உயிரி ஆயுதம்’. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரும் எனது மேலதிகாரியுமான ஷான் சாவோ, என்னிடம் நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகளை அளித்தார். அதில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களை எளிதாகவும், அதிக வீரியத்துடனும் தொற்றும் திறனாகவும் கொண்டது எந்த வைரஸ் என்பதைக் கண்டறியுமாறு கூறினார்.

2019ல் வூஹானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது என் சக பணியாளர்கள் (வைரஸ் ஆராய்ச்சியாளர்கள்) தடகள வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாக தெரிந்தது. ஏன் சென்றீர்கள் என்று கேட்டபோது, வீரர்களின் உடல்நிலையை சோதிக்கச் சென்றதாகக் கூறினார்கள். வீரர்களின் உடல்நிலையை அறிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லையே! ஆகவே, வைரஸை வீரர்களிடம் பரப்புவதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர் என்று ஷான் சாவோ கூறினார்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

பின்னர் 2020 ஏப்ரலில், ஷான் சாவோ முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லிம்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக ஷின்ஜியாங்கிற்கு அனுப்பப்பட்டார். வைரஸை மனிதர்களுக்கு பரப்பி அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கவனிப்பதற்காக அங்கு அனுப்பப்பட்டதாக அவரே குறிப்பிட்டார் என்று கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img