December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ., சதி? இந்தியா மீது பழி போட்டு மாட்டிக் கொண்ட கனடா!

khalistan singh nijjar - 2025
#image_title

இந்தியா – கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தனக்கு உதவிகரமாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் பிறந்து வளர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45), கனடாவில் குடியேறி சட்டவிரோதமாக அந்நாட்டு குடியுரிமை பெற்றார். அங்கு இருந்தபடி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டார். அதனால் அவருடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நெருங்கிவந்தது.

அவரது உதவியுடன், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கனடாவில் நிகழ்த்தி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., தன் கூலியாளாக, பயன்படுத்தி வந்ததாம். இந்நிலையில், பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு புதிதாக வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களை ஆதரித்து உதவும்படி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ்.ஐ., ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றுவிட்டு, பழியை இந்திய ஏஜன்டுகள் மீது சுமத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் விசாரிக்க தயாராக உள்ளதாக இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பின் தலைவரும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாவே காரணம் என்று அண்மையில் கனடா பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வந்த அமெரிக்கா, தற்போது திடீரென்று இந்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனிடையே ஐநா பொது அவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அரசியல் வசதிக்கு ஏற்ப தீவிரவாதத்தை கையாள்வதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று கனடாவை மறைமுகமாக சாடினார்.

மேலும் தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அடிப்படை ஆதாரங்களை யாரேனும் வழங்கினால் அது குறித்து விசாரிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது, தூதரக அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே என்று குறிப்பிட்ட அவர், கனடாவில் உள்ள தீவிரவாத தலைவர்களை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories