கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மெக்காவில் பலர் உயிரைப் பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த விபத்தில் தங்கள் குடிமக்களைப் பறிகொடுத்த ஈரான் உள்ளிட்ட நாடுகள் சவூதி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் விபத்து, மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என சவூதி அரேபிய மூத்த மதகுரு முஃப்தி ஷேக் அப்துல் அஜீஸ் பின் -அப்துல்லா அல் – ஷேக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சவூதி பட்டத்து இளவரசரும் உள்துறை அமைச்சருமான முஹம்மது பின் நயீஃபிடம் பேசிய அவர், இந்தத் துயரச் சம்பவத்துக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்றும் விதியைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்.


