குப்பை அள்ளி வளர்த்த தாய்: தெருவில் விழுந்து வணங்கிய தாய்லாந்து அழகி

Published:

பாங்காக்:

தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 17 வயது இளம் பெண், குப்பைகளை அள்ளி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தாயின் காலில் விழுந்து தனது நன்றியை செலுத்தியுள்ளார்.

பின்னணியில் குப்பைத் தொட்டிகள் இருக்க, அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தாயின் காலில் தான் பெற்ற அழகிப் பட்டத்துடன் விழுந்து வணங்கி நன்றி கூறினார் கனித்தா மின்ட் பசேங். இந்த புகைப்படம் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

செப்டம்பர் 2015ல் நடைபெற்ற மிஸ் அன்சென்ஸார்ட் நியூஸ் தாய்லாந்து பட்டத்தை வென்ற கனித்தா, பட்டம் வென்றுவிட்ட பிறகும் கூட, தனது சொந்த கிராமத்தில், தாய்கு குப்பைகளை சேகரிப்பதில் உதவி செய்து வருகிறார்.

நாங்கள் இந்த வேலையை செய்வதற்காக பெருமைப்படுகிறோம். இது நேர்மையான பணிதான். நான் வளரும் போது தேவைப்படும் உணவை இந்த பணிதான் எனக்கு வழங்கியது. நான் உயர்கல்வி படித்து முடிக்க இந்த வேலை மூலமாகத்தான் பணம் கிடைத்தது. எனவே, எனது தாய்க்கு நான் இப்போதும் உதவியாக உள்ளேன் என்று கூறுகிறார் கனித்தா.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img