முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் திருமகனார் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அல்ல… அடிக்கடி எதையாவது உளறிக் கொட்டி உளறல் திலகம் என்று பட்டப் பெயர் சூடப் பெற்றிருக்கிறார்.
தில்லு முல்லு கட்சியின் தலைவராக முடி சூடியிருக்கும் மூக்கா ஸ்டாலின், தலைவரான பின் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், திக்கு முக்காடி வருகிறார். பிரசார பலம் இன்றி தவித்து வரும் அவருக்கு தற்போது துண்டுச்சீட்டு வசனங்களை எழுதிக் கொடுக்க முன்னர் இருந்தது போன்ற அதி புத்திசாலி அறிவாளிகள் அறிவாலயத்தில் இல்லாததால், அறிவாலய மண்டபத்தில் தெண்டச்சோறு உண்டுகொண்டிருக்கும் யாரோ எழுதிக் கொடுத்ததை எல்லாம் தானும் புரிந்து கொள்ளாமல் மற்றவரும் புரிந்துகொண்டு விடாத வகையில் பேசிவிடுகிறார் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!
அண்மையில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசிய மு.க. ஸ்டாலின்,
பொல்லாத ஆட்சி பொள்ளாச்சி சாட்சி!
துப்புகெட்ட ஆட்சி தூத்துக்குடி சாட்சி
– என்று ஏதோ சினிமாத்தன ரைமிங் எல்லாம் விட்டிருக்கிறார்.
அவருக்கு சரிக்கு சரியாக, அதாவது ஸ்டாலின் தனக்கு சமமான போட்டியாளர் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவாரேயானால், அவருக்கு வசனம் எடுத்துக் கொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இதேபோன்ற ரைமிங் வசனங்களை டைமிங்காக எடுத்து விடுகின்றனர் சிலர்.
அவற்றில் ‘நச்’சென்று நாலு இங்கே…
ஆராசா டவுட்டு ..
சாதிக்பாஷா அவுட்டு !
சர்க்காரியா சுரண்டர் ..
இந்திராவிடம் சரண்டர் !
திமுக குத்தியது தமிழனின் முதுகில் !
காவிரி முடங்கியது ஹேமாவதி மதகில் !
கச்சத்தீவு இலங்கைக்கு கருணாநிதி அன்பளிப்பு !
தமிழ்நாட்டு மீனவனோ நடுக்கடலில் தத்தளிப்பு !
ஊழல் சூழல் திமுக மாடல் !
நேர்மை தேடல் தமிழன் வாடல் !