முஸ்லிம் வாக்குகளை நம்பி கேரளம் வயநாடில் போட்டியிடுகிறார் ராகுல்!

rahul tweet image - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதியில் மட்டுமல்லாது, கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.

முதல் இரு கட்ட வாக்குப் பதிவுகளுக்கான வேட்புமனு இறுதி செய்வது நிறைவடைந்துள்ள நிலையில் ராகுல் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. .அதற்கு ஏற்ப அவரை கேரளம் வயநாடு தொகுதியில் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

காரணம், ராகுலின் அமேதி தொகுதியில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், காங்கிரஸார் மேலும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். கட்சித் தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல என்றும் பலரும் அவ்வாறு போட்டியிட்டிருக்கிறார்கள் என்றும் ராகுலுக்காக சமாதானம் கூறப் பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

அமேதி தொகுதியில் பாஜக.,வின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோற்றாலும் அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்திருக்கிறார். அடிக்கடி தொகுதிக்கு பயணம் செய்து, தொகுதி மக்களுடன் நெருக்கம் காட்டியிருக்கிறார் என்பதால், ஸ்மிருதி இரானி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது.

எனவே, ராகுல் போட்டியிட மிகவும் சாதகமான தொகுதி வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அப்போது, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் முஸ்லிம்கள் வாக்குகள் அதிகம் என்பதால், அதை நம்பி களத்தில் இறங்க அறிவுரை கூறப்பட்டது. .ஆனால் அதற்கு ஆளும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனராம். கேரளத்தை தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது கம்யூனிஸ்ட் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ஏகே அந்தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

வயநாட்டில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை நம்பியே காங்கிரஸ் களத்தில் இறங்குகிறது. ஆயினும், இரு தொகுதிகளில் போட்டியிடும் ராகுல், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அமேதி தொகுதி தங்கள் குடும்பத் தொகுதி என்ற நிலையில் அதையே தக்க வைத்துக் கொள்வார் என்றும், வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார் என்றும் இப்போதே குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories