December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

ஜோதிமணிக்காக… அப்பாவிகளை அடித்து உதைத்த செந்தில் பாலாஜியின் ரவுடி கும்பல்!

karur senthilbalaji jothimani - 2025

கரூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக, அப்பாவிகள் இருவரை செந்தில் பாலாஜியின் குண்டர் படை அடித்து உதைத்தது

ஜோதிமணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி உடன் வந்த திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸின் ஜோதிமணி வாக்கு கேட்டு கரூர் அருகே வந்த போது, ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று ஒருவர் கேட்க, அவர் மீது திமுக., குண்டர் படை கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து, இருவர் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கரூர் மக்களவைத் தொகுதியின் தி.மு.க கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம், ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்த போது தி.மு.க வினர் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, அருகே நின்றிருந்த அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று கேட்டுள்ளார். இதை அடுத்து அவரைக் கவனித்த திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள், அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்!

karur admk man beaten2 - 2025

தொடர்ந்து பெரியசாமி என்ற இளைஞர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைப் பார்த்து, நீங்க இப்போ அதிமுக.,விற்கு வாக்குகள் கேட்கிறீர்களா? திமுக.,விற்கு வாக்குகள் கேட்கிறீர்களா என்று கேட்டுள்ளார். மேலும், செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று, நன்றி சொல்லக் கூடவரவில்லை என்று அவர் முணுமுணுத்துள்ளார். இதை அடுத்து, திமுக., குண்டர்களால் அவரும் கட்டம் கட்டப் பட்டார். அவர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தபட்டது,

இவர்கள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.

karur admk man beaten - 2025

இந்தச் சம்பவம் நடந்த போது, அருகில் இருந்த செய்தியாளர்கள், இந்த கொலை வெறித் தாக்குதல்களையும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துள்ளனர்.. அதை கவனித்து விட்ட திமுக., ரௌடிகள், நிருபர்களின் செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டனர். எதற்காக நாங்கள் அடிப்பதை படம் எடுக்கின்றீர்கள் என்று கோபத்துடன் கத்தியவாறே, கேமிராக்களையும் பிடுங்கினர்.

பின் அதில் பதிவாகியிருந்த ஒளிப்பதிவுகளை அழித்தனர். ஒரு நிருபரின் செல்போனை பிடிங்கிக் கொண்டு, அதை ரீசெட் செய்து, அதில் இருந்த தகவல்களை எல்லாம் அழித்துவிட்டு, பிறகு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளனர். உடன் இருந்த செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

karur senthilbalaji jothimani2 - 2025

இந்நிலையில் இதையெல்லாம் கவனித்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் அந்த அடிதடி காட்சிகளைக் கண்டு ரசித்தனர். செய்தியாளர்கள் தாக்கப் படுவதையும் தடுக்க முற்படவில்லை.

ஆனால், அதை விட அதிர்ச்சிகரமாக, மைக் பிடித்து வாகனத்தில் ஏறி நின்ற ஜோதிமணி, கேள்வி கேட்ட அந்த அப்பாவி நபர், கையில் கத்தி வைத்துக் கொண்டிருந்தார் என்றும், எத்தனை பேர் என்னைத் தாக்க வந்தாலும், அதைக் கண்டு அசரமாட்டேன், பயப்பட மாட்டேன் என்றெல்லாம் பொதுவில் பேசி, கேவலமான அரசியலைச் செய்து கொண்டிருந்தார். .

அதனை படம் பிடித்த திமுக., சார்பு ஊடகங்கள், அவற்றையே செய்தியாக்கி, உடன் அடிவாங்கிய செய்தியாளர்களுக்குக் கூட உதவி செய்யாமல், ஜோதிமணி கூட்டத்தில் கத்தியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு என்று செய்தியை அவர்கள் நோக்கில் எழுதி, தங்கள் ஊடகங்களுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர்.

இந்தச் சம்பவங்களையெல்லாம் கண்ட அப்பகுதி மக்கள், செந்தில் பாலாஜி மற்றும், ஜோதிமணியுடன் வந்தவர்களை சபித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories