வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு செயல்படும் காங். கேங் லீடர் அழகிரி!

rajiv gandhi 1
rajiv gandhi 1

முப்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நம் தமிழகத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு. ராஜிவ்காந்தியை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்தனர் விடுதலை புலிகள் இயக்கத்தினர். அவரோடு 14 தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை தியாகிகளாக போற்றும் கொடுஞ்செயல் நம் தமிழகத்தில் மட்டுமே. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை வைப்பது முழுக்க முழுக்க அரசியலே. ‘தமிழர்கள்’ என்ற உணர்வை தூண்டி விட்டு, அதில் குளிர்காயும் சில அரசியல் கட்சிகளுக்கு துணை போவது காங்கிரஸ் கட்சி தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில், தி மு க கூட்டணியில் இருக்கும் சில அமைப்புகளும், கட்சியினரும் ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசுவதோடு, ராஜிவ் காந்தி அவர்களே குற்றவாளி என்ற ரீதியில் தொடர்ந்து பேசுவதை காங்கிரஸ் கட்சியினர் பொருட்படுத்தாமல், அவர்களோடு அரசியல் அரங்கில் பயணித்ததே இந்த நிலைக்கு காரணம். அரசியல் அதிகாரத்திற்காக தங்கள் தலைவனை கொன்ற கூட்டத்திற்கு சாமரம் வீசும் கும்பலுக்கு துணை போனதை ராஜிவ் காந்தி அவர்களின் ஆன்மா மன்னிக்காது.

பாஜகவை பொறுத்த வரை இந்திரா காந்தி அவர்களின் படுகொலையையும், ராஜிவ் காந்தி படுகொலையையும் வன்மையாக கண்டித்ததோடு, அது பயங்கரவாத செயல் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறது. நான் பங்கேற்ற பல விவாதங்களில் கூட கடுமையாக கண்டித்து வந்திருக்கிறேன். ஆனால், ஒரு சில காங்கிரஸ் கட்சியினரே ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தொலைக் காட்சிகளில் வலியுறுத்தியும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது இன்று வரை மௌனம் காத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் நிலவும் ஜனநாயகம் தான் என்று அவர்கள் பதில் கூறுவார்களேயானால், அந்த போலி ஜனநாயகத்தை படுகுழியில் தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டும்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பின் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடியரசு தலைவரிடம் வைத்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சிக்கு தி மு கவின் வெற்றி பரிசோ?இதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கண்டனங்களோ, மறுப்போ இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள்.

திரு.அழகிரி அவர்களே, உங்கள் மனசாட்சியை தொட்டு பார்த்து பேசுங்கள். உங்கள் கட்சிக்கும், தேசத்திற்கும் எதிரான செயல் நடக்கும் போது அதை கண்டும் காணாமல் போகலாமா? உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இதற்கு உடன்படுவார்களா?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

  • நாராயணன் திருப்பதி (செய்தித் தொடர்பாளர், பாஜக.,)
ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!
stalin letter
stalin letter

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories