பொய்யாமொழிப் புலவனை மதம் மாற்றிய… ஜி.யு. போப் எனும் பொய்யன்!

tn governor rn ravi - 2026

இந்திய தலைநகர் டெல்லியில் தமிழ் கல்வி கூட்டமைப்பு என்றொரு அமைப்பு உள்ளது, அங்கு திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது, திறந்து வைத்தவர் தமிழக ஆளுநர் ரவி அவர்கள்

இச்சிலைதிறப்பில் திருவள்ளுவரை ஏக குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ் அமைப்பு தலைவர்களும், திராவிட தலைவர்களும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் கேட்கவே கூடாது

முன்பு கன்னடத்திலும் வடக்கே கங்கை கரையிலும் வள்ளுவன் சிலைக்கு சர்ச்சை வந்தபொழுது பொங்கிய திராவிட சிங்கங்கள் டெல்லியில் வள்ளுவன் சிலை திறக்கப்பட்டபொழுது அமைதி என்றால் அதுதான் திராவிட தமிழ் அரசியல்

அந்த விழாவில் கவர்னர் பேசியதுதான் இப்பொழுதுவிஷயம் , இதுகாலமும் திருக்குறள் ஜி.யு போப்பால் ஆங்கிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது எனும் வெற்று கோஷத்தை மிக நுணுக்கமாக உடைக்கின்றார் ஆளுநர்

உண்மையில் ஜியு போப் எனும் ஜார்ஜ் உக்ளே போப் தமிழகத்துக்கு 18ம் நூற்றாண்டில் மதம்மாற்றத்தான் வந்தான், வந்தவன் தமிழ்படித்தான் இன்னும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் படித்தான். அது தமிழ்பால் வந்த பற்று அல்ல மதம்மாற்ற அது அவசியம்

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

தென்மாவட்டங்களில் (முதலில் நெல்லை தூத்துக்குடி பக்கமும் பின் தஞ்சாவூர் பக்கமும்) தொடக்கத்தில் மதம் மாற்றினான் , ஆனால் சாதியினை அவனால் மாற்றமுடியவில்லை காரணம் அவனும் போப் அய்யராக மாறி இருந்தான்

இந்துமதத்தின் சாதி சிக்கலை களைவதாக சொல்லி கிறிஸ்துவத்துக்கு அவர்களை மாற்றினாலும் அங்கும் அதே சிக்கல் எழ அவன் தலைதெறிக்க பெங்களூருக்கு ஓடினான்

அவன் மதம்மாற்ற பொருத்தமில்லாதவன் என உணர்ந்த மேலிடம் இந்துக்களின் பல நூல்களை ஆய்வு செய்து (?) மொழிமாற்றும் பொறுப்பை கொடுத்தது

அவன் அப்படித்தான் திருக்குறளை ஒரு அரசியல் நூலாகக் கருதி மொழிபெயர்த்தான் அதில் இருக்கும் இந்து அடிப்படை கருத்துக்களை, இந்து தர்ம கருத்துக்களை முழுவதுமாக மறைத்து அது ஒருநீதி நூல் என மட்டும் மொழிபெயர்த்தான்

இதைத்தான் டெல்லியில் சுட்டிக்காட்டி ஒரு ஆன்மீக நூலை திரித்தான் மிஷனரி ஜியு போப் என உரையாற்றியிருக்கின்றார் ஆளுநர்

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இது உண்மையும் கூட‌

இப்படிப்பட்ட போப் திருவாசகத்தை மொழிபெயர்த்தால் எப்படி இருந்திருக்கும்?

ஜியு போப் தமிழ்படித்த வெள்ளையன், அவன் தமிழ் நூல்களை படித்து உருகி ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தான் என்பதெல்லாம் திட்டமிட்ட விளம்பரம், அவன் மதம்பரப்ப வந்த மிஷனரி. வந்தவன் மதம் பரப்ப தமிழ்படித்தான், இங்குள்ள இந்து நூல்களை அதன் இந்துசாரம் நீக்கி மொழிபெயர்த்தான்

அதை டெல்லியில் சொல்லி அதிர வைத்திருக்கின்றார் ஆளுநர்

ஜியு போப் தன் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்” என எழுதச் சொன்னான் என்பதும், அப்படி எழுதப்பட்டது என்பதும் முழு பொய்

அவன் கல்லறையில் அவன் கிறிஸ்தவ கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான் என எழுதப்பட்டதே அன்றி, தமிழில் உறங்குகின்றான் என எழுதப்படவே இல்லை

அவன் லண்டனுக்கு திரும்பியபின்னும் சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு மட்டும் ஏன் பணம் அனுப்பினான் என்பதும் மர்மம்

அவன் கடிதமெல்லாம் திருவாசக உரைகளால் வழியும், அவன் அதனை அழுது அழுது எழுதினான் என சொல்லும் தமிழ்க்கூட்டம் அப்படி ஒரு கடிதத்தைக் கூட கடைசிவரை ஆதாரமாகக் காட்டவில்லை

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

இப்படிப்பட்ட ஒரு நூற்றாண்டு பொய்யினைத்தான் உடைத்திருக்கின்றார் ஆளுநர், உண்மையில் இது ஒரு புரட்சிக் குரல்

வழக்கமாக ஆளுநர் எதை சொன்னாலும் பொங்கும் திராவிட மற்றும் போலிதமிழ்க்கூட்டம் இம்முறை கனத்த அமைதி, எனினும் அடுத்தமுறை ஆளுநர் மாளிகைக்கு டீ குடிக்க செல்லும்பொழுது இதனை திராவிடத்தார் கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பார்கள் என நம்புவோம்

சரி, ஜியு போப்பினை ஏன் சரியாக அடித்தார் ஆளுநர்?

அந்த போப்புக்கு சென்னையில் சிலை வைத்தவர் கருணாநிதி என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories