January 25, 2025, 3:00 AM
24 C
Chennai

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஜோடியாக நடிக்கவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே ‘இறைவி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இவருடன் இணைந்து ராஜராஜன் என்பவரும் இந்த படத்தை தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் வில்லனாக லிங்காவும், இன்னொரு முக்கிய கேரக்டரில் விவேக் பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் இசையில் உருவாகும் இந்த படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தென்காசியில் தொடங்கவுள்ளதாகவும், அதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்

விஜய்சேதுபதி, அஞ்சலி, அருண்குமார், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி

ALSO READ:  கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், 'யோலோ'

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!