பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினி எதிர்ப்பு கொள்கையை எடுத்து அவ்வப்போது ரஜினியை விமர்சனம் செய்து வருகிறார். இந்த விஷயத்தில் அவருக்கு உதவியாக அவரை போலவே பல வருடங்களாக படம் இயக்காமல் உள்ள சீமான், அமீர், கரு பழனியப்பன் உள்பட ஒருசிலர் ஆதரவளித்து வருகின்றனர்
ஆனால் இவர்களுடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், ரஜினி தன்னுடைய வேலையை செவ்வனே செய்துவருகிறார். மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, ஆட்சியையும் கைப்பற்றி தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை மூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் கூறியதாவது:‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்
பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

