மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள ஞாயிறு அன்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை சிலர் தாக்கியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள்தான் அவரை தாக்கியதாகவும் தகவல் பரவியது.
அவரை சிலர் தாக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டு, சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் நடந்து, ஒரு சில மணி நேரங்களில், சென்னை விமான நிலையத்தில், கமலஹாசன் “என் ரசிகர்கள் அவரை தாக்கவில்லை. இப்போதுதான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று கூறினார்.
சிவகார்த்திகேயனும் நிருபர்களிடம் “அது ஒரு சின்ன பிரச்னை. எனக்கு ஒன்றும் இல்லை. இதோ உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்காக இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததற்கு நன்றி” என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் “எனக்கு ஒன்றும் இல்லை. உங்களின் ஆசிர்வாதங்களுடன் நான் நலமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எல்ல நல்ல இதயங்களுக்கும் என் நன்றி. உங்கள் அன்பு என்னை பலப்படுத்துகிறது. உங்களை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டரில் சிவகார்த்திகேயன்
Wit all ur Blessings Im Perfectly alright.Tnx 2 all d Luvly hearts 4 ur Greatest Support at Tis Moment.Ur Luv makes me Stronger.Luv U All


