காமெடி கச்சேரியாக திரைக்கும் வரும் ‘கத்துக்குட்டி!’

 
நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் நூறு சதவிகித காமெடி படமாக உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம், வருகிற அக்டோபர் முதல் தேதி திரைக்கு வரவிருக்கிறது. முதன் முறையாகக் கிராமத்து நாயகனாகக் களமிறங்கி இருக்கும் நரேன், காமெடி நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார். கெட்டப் தொடங்கி கேரக்டர் வரை மிக வித்தியாசமான நரேனை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். 
 
‘கத்துக்குட்டி’ படத்துக்காக 32 நாட்களை ஒதுக்கிக் கொடுத்து ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில் காமெடி கச்சேரியையே நிகழ்த்தி இருக்கிறார் சூரி. ”கதையும் காமெடியும் பின்னிப் பிணைஞ்ச புது மாதிரியான திரைக்கதைதான் ‘கத்துக்குட்டி’யோட ஸ்பெஷல். என் வாழ்நாளுக்கும் நான் பெருமைப்படக்கூடிய படம் இது. வழக்கமான வார்த்தைகளா இதை நான் சொல்லலை. படத்தைத் தியேட்டர்ல பார்க்குறப்ப நான் எவ்வளவு ஆத்மார்த்தமா இதைச் சொல்லி இருக்கேன்னு எல்லோருக்கும் தெரியும். அவ்வளவு நம்பிக்கையான படம்.” என நெகிழும் சூரி, படத்தில் ‘காதல்’ சந்தியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு போட்டி ஆட்டமும் போட்டிருக்கிறார். 
 
‘கன்னக்குழி அழகி’ ஸ்ருஷ்டி டாங்கே தஞ்சை மண்ணின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக கிராமத்து நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் குணச்சித்திரப் பாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார். 
 
படத்தில் எந்த இடத்திலும் ‘கட்’ கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ”தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்” என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள். தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாலே வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது. 
 
”நூறு சதவிகித காமெடிப் படமாக ‘கத்துக்குட்டி’ உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக்கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மூவரும். 
 
அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் ‘கத்துக்குட்டி’ வெளியாக இருக்கிறது.  
 
 
படம்: கத்துக்குட்டி
 
நடிப்பு: நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், ராஜா, காதல் சந்தியா, காதல் சரவணன், சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர்
 
கதை, திரைக்கதை, வசனம், முதன்மை படத்தொகுப்பு, இயக்கம்: இரா.சரவணன்
 
ஒளிப்பதிவு: சந்தோஷ் ஸ்ரீராம்
 
இசை: அருள்தேவ்
 
படத்தொகுப்பு: ராஜா சேதுபதி
 
மக்கள் தொடர்பு: நிகில்
 
பாடல்கள்: சினேகன், இரா.சரவணன், வசந்த் பாலகிருஷ்ணன்
 
ஆடை வடிவமைப்பு: சிவபாலன்
 
நிர்வாகத் தயாரிப்பு: குழலினியன்
 
நடனம்: தம்பி சிவா
 
சண்டைப் பயிற்சி: பிரகாஷ்
 
தயாரிப்பு: எம்.அன்வர் கபீர், ஆர்.ராம்குமார், பி.ஆர்.முருகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories