9 மணி நேரம் விசாரணை.. இன்று மீண்டும்..! வதேராவுக்கு ‘ஜே’ போட்ட காங்கிரஸார்!

Published:

robert vadra mother maureen - 2026

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறையினரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உள்ளார் ராபர்ட் வதேரா.

நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா வதேராவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மௌரீனிடமும் பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பி சில விளக்கங்களைப் பெற்றனர்.

இருப்பினும், மேலும் விசாரணை முடிவடையாததால், இன்று மீண்டும் ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்றும் அவர் அமலாக்கத்துறையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு பிரியங்கா வதேரா ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், இது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸார் கருதுகின்றனர். இருப்பினும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img