ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

Published:

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காத்திருக்கிறோம் -வரட்டும்னு

காத்திருக்கிறோம் ! என்ன தப்பு?

விடியல் வந்ததும்

Good morning சொல்ல…

நான் கொஞ்சம் கூடுதல்.

யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல்

ஆளாய் அலைவேன். இன்று

அகப்பட்டவர்

ஆஸ்கார் ரஹ்மான்

பிரபஞ்சமே வியந்து

பூமி பந்தை விரித்து

பூங்கொத்தாய் உன்

புகழ் கையில் வழங்கியும்

தலை -கால்-தலை

இடம் பெயராமல்

காலைச்சூரியன் பட்ட

கனகபுஷ்பராகமாய்-ஒரு

புன்னகையை மட்டும்

பதித்துவிட்டு அடுத்த

பணிக்குள் விழையும்

உன்னை நானிப்படி

புகழ்கையில் அறிவேன்

நீ…

இசையை கடத்தும்

தீவிரவாதி மட்டுமல்ல,

இசையை கடந்தும்

ஞானி….நீ …. என! இவ்வாறு தனது வாழ்த்துகளை கவிதைகளாக கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img