ஸ்ரீதிவ்யாவை பார்த்து மூக்கு மேல் விரல் வைக்கும் மக்கள்

Published:

vellakkara durai20தெலுங்கில் நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு வெற்றி கனியை எட்ட முடியாததால் தமிழ் பக்கம் வந்தார். வருத்தபடாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவிற்கு நிலையான இடத்தை பிடித்து கொடுத்தது. அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஐதராபாத்து நடிகையாக இருந்த ஸ்ரீதிவ்யா கோடம்பாக்கத்து நடிகையாக இங்கேயே தங்கி விட்டார். மற்ற நடிகைகளை போல் நண்பர்களை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொந்த ஊருக்கு விசிட் அடிக்க மாட்டாராம். சென்னையில் உள்ள நண்பர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து ரிலாக்ஸ் செய்து கொள்கிறாராம். அவர்களை பார்க்க செல்லும் போது எந்த பந்தாவும் இல்லாமல் நார்மலான பெண்களை போன்று உடையணிந்து செல்கிறாராம். படத்துக்கு படம் ஹீரோக்களை கலாய்க்கும் ஸ்ரீதிவ்யா மிகவும் கூச்ச கூபாவத்துடன் தான் அனைவரிடமும் பழகுவாராம். இதை பார்த்த ஸ்ரீதிவ்யா தோழிகளின் பக்கத்து வீட்டுகாரார்கள் ஹீரோக்களை காய்ச்சி எடுக்கும் நடிகையாக இவர் என்று மூக்கு மேல் விரல் வைக்கிறார்களாம்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img