சங்கராபரணம் விமர்சனம்

sangarabaranamசுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும் செறிவும் இருந்துள்ளது தான் படத்தின்சிறப்பு. ‘சங்கராபரணம்’ சங்கர சாஸ்திரிகள். ஒரு சங்கீத மாமேதை. நாதம் அவர் நாவில் குடியிருக்கும் சங்கீதம் சாரீரத்தில் கொலுவிருக்கும். தன் வித்தை மீது அவருக்கு கர்வமுண்டு இசையே வாழ்க்கை என்பதால் குடும்பம் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு மகள் உண்டு பெயர் சாரதா. கௌரவமும் பெருமிதமும் கொண்ட அவர், வெளியூருக்குக் கச்சேரிக்கு போகிறார். அங்கு அவரைப் பார்க்க துளசிஎன்பவள்  வருகிறாள். அவளுக்கு அவருடைய சங்கீதம் மீது ஈர்ப்பு ,காதல் ,மோகம் மதிப்பு எல்லாம் உண்டு.நடனம் அவளது தனிச்சிறப்பு.அவர் பாடும் போதெல்லாம் அவள் அதைக்கேட்டு ஆடுவாள்.  சங்கர சாஸ்திரிகளைத் தன்  மானசீக குருவாக்கி அவரைத் தொடர்கிறாள் .அவர்களுக்குள் இருப்பது குரு சிஷ்யை என்கிற புனித உறவுதான். அவளது அம்மாவோ மகளுக்கு கலைகளைக் கற்றுக் கொடுத்துத் தாசியாக்கி காம வியாபாரம் செய்ய முயல்கிறாள். அச்சூழலில் அவளை ஒரு ஜமீன் கெடுத்து விடுகிறான். தீண்டியவன். தொடர்கிறான்.  தீண்ட முயன்ற  ஜமீனை தாங்க முடியாமல்  கண்ணாடியை உடைத்து குத்தி விடுகிறாள் துளசி. தன்னை நாடி வந்த அப்படிப்பட்ட துளசியை அழைத்துக் கொண்டு வீடு வருகிறார் சங்கர சாஸ்திரிகள். துளசி பற்றி ஊர் தூற்றுகிறது. வீட்டிலிருந்த மனைவி இது அபச்சாரம் என்று கூறி வெளியேறி விடுகிறாள். தன்னால் குருவுக்கு அவமானம் என்று கூறி  ஒருகட்டத்தில் விலகிச் சென்று விடுகிறாள் துளசி..தன் வயிற்றிலிருக்கும் கொடியவன் கொடுத்த பிள்ளையை வளர்த்து, தெரியாமல் குருவின் வீட்டுக்கு அனுப்பி தன்பிள்ளை என்று யாருக்கும் தெரியாமல்  சாஸ்திரியின் சங்கீத சீடனாக்குகிறாள். தன் மானசீக பீடத்தில் இருக்கும் குருவின் பெயரால் ஒரு கலையரங்கம் கட்டி அவரை பாட வைக்கிறாள் துளசி. குருவின் இழந்த பெயர் மீட்கப் படுகிறது. அது துளசியின் மண்டபம், சீடன் துளசியின் பிள்ளை என்று கடைசியில்தான் தெரிகிறது. தெரியும் போது சாஸ்திரியின் உயிர்பிரிய. தொடர்ந்து துளசியும் உயிர்விட. படம் முடிகிறது. ‘சங்கராபரணம்’என்றால் விஷப் பாம்பு என்று பொருள். சங்கரனாகிய சிவன் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்பு என்று பொருள். படத்தில் சங்கர சாஸ்திரிகளாக சோமயாஜுலு வாழ்ந்திருக்கிறார். நடை உடை பாவனை பார்வை உடல்மொழி என எல்லாவற்றிலும் கச்சிதமான நடிப்பு. சங்கீத திறமை காட்டும் காட்சிகளிலும், இசை பற்றிய சீண்டலின் போது சீற்றம் கொள்ளும் கட்டத்திலும் நிரபராதியான துளசிக்கு அடைக்கலம் தரும் போதும் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் சோமயாஜுலு  . இது போன்று நிறைய இடங்கள் உண்டு. தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிற மாப்பிள்ளை என்ற போதும் ரிஷபம் என்பதை சரியாகச் சொல்லத் தெரியாததால் இந்த சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுக்கும் கோபம் அட டா.. கர்நாடக சங்கீதமா மேற்கத்திய சங்கீதமா என்று இளைஞர்கள் சவால் விடும் காட்சியில் சவாலை எதிர்கொண்டு பதில் சவால் விடும் காட்சியில் அதிர வைக்கிறார். பெண் பார்க்கும் தருணத்தில் மகள் ராகத்தை மாற்றிப் பாடிவிட வெகுண்டெழுகிறார். இப்படி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் சோமயாஜுலு. துளசியாக வரும் மஞ்சுபார்கவி, படத்தில் முதல் 40 நிமிடங்கள்  பேசவே மாட்டார்.  அந்தக் குறை எதுவும் தெரியாத படி அவரது பாத்திரம் பற்றி அவரது கண்களே பேசி விடுகின்றன. மஞ்சுபார்கவி இடத்தில் யாரையும் யோசிக்க முடியவில்லை.அப்படி ஒரு பொருத்தம்.அவர் படத்தில் பேசும் வசனங்களே மிகக் குறைவுதான் .ஆனால் இறுக்கமும் மௌனமும் பெரிய மொழி என்று நிரூபிக்கிறார் ..அந்தக் குறையை அவரது மகனாக சுட்டி குட்டிப் பையனாக வரும் துளசி போக்குகிறார். துறுதுறுவென நடை பேச்சு என கொள்ளை கொண்டு விடுகிறார் நடிகைதுளசி. ‘சங்கராபரணம்’ராஜலட்சுமி இதில்தான் அறிமுகம். சோமயாஜுலுவின் மகளாக வருகிறார். மனதில் பதிகிறார். மாப்பிள்ளையாக வருபவர் நண்பராக வருகிறவர் என எல்லாருமே தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்கள். படத்தின் பாடல்கள் இன்றும் இனிப்வை எஸ்.பிபி,வாணி ஜெயராம், ஜானகி குரல்களில்  தேன் சொட்டுகின்றன பாடல்கள் . சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை அழகுணர்ச்சி வழியும் காட்சிகளால் மெய்ப்பிக்கிறார் கேமராமேதை பாலுமகேந்திரா. சீர்திருத்தக் கருத்து, சங்கீதப் பெருமை ,மேற்கத்திய மோகம் என எல்லாமும் பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறுப்பு குன்றாத மொழிமாற்று முயற்சி. சோமயாஜுலுவுக் குரல் கொடுத்துள்ள ராமு துல்லியமாக குரல் மூலம் நடிப்பையும் வழங்கியுள்ளார். இப்போதெல்லாம் ஒருபாபடலுக்கே கழிப்பறை தேடி வெளிநடப்பு செய்கிறார்கள் ரசிகர்கள். இக்காலத்திலும் அனைத்துப் பாடல்களும் இனிக்கின்றன .உட்கார வைக்கின்றன காரணம் எல்லாமே சூழலுடன் வருகின்றன. படம் பார்த்து முடிந்ததும் இயக்குநர் கே.விஸ்வநாத், இசைமேதை கே.வி. மகாதேவன்,கேமராமேதை பாலுமகேந்திரா. ஆகியோரை வணக்கம் செய்யத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories