குமாரசாமி; குறுக்குப் புத்தி; குறுக்கு வழியில் நாற்காலி!

05 May17 Kumarasaamy - 2026

குறுக்கு வழியில் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க போகும் குமாரசாமி தன் குறுக்கு புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் தமிழ்நாட்டிற்கே வந்து அணைகள் நிரம்பினால் தான் தண்ணீர் திறந்து விடப்படும்.விகிதாசரப்படி எல்லாம் திறந்து விட முடியாது என்கிறார்.

விகிதாசாரம் என்றால் கர்நாடகாவில் மொத்த அணைகளும் நிரம்பினால் 740 TMC நீர் இருப்பு. அப்போது தமிழ் நாட்டிற்கு 177.50 TMC. அதே போல் அணைகளில் 74 TMC இருக்கிறது என்றால் தமிழ்நாட்டிற்கு 17.50 TMC உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் படி திறந்து விட்டே ஆக வேண்டும்.

இப்போதே கர்நாடக அணைகளில் 70 TMC க்கு மேல் நீர் உள்ளது. எனவே மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் ஜூன் மாதம் 10 TMC தண்ணீராவது திறந்து விடப்பட்டே ஆக வேண்டும். காரணம் இந்த வருடம் ஜனவரியில் இருந்து இது வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடப்பட வில்லை. அந்த 70 TMCயையும் கர்நாடகா உபயோகத்திற்கே பயன்படுத்துகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவின்படி அதில் நம்முடைய பங்கை தர மறுத்தது முந்தைய காங்கிரஸ் அரசு. எனவே ஆணையம் மூலமாக இந்த விகிதாசார முறையை உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் பாஜக  மத்திய அரசு வரைவு திட்டத்தில் சேர்த்து தமிழகத்துக்கு நன்மை செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்க முடியாது என்று திருவரங்கத்தில் – தமிழ்நாட்டில் தைரியமாக கூறி செல்கிறார் குமாரசாமி.

ஆனால் இந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவினால்தான் 125 இடங்களில் டெபாசிட் இழந்தும், வெறும் 37 இடங்களில் ஜெயித்து மூன்றாம் இடத்தில் இருந்தும் குறுக்கு புத்தி குமாரசாமி முதலமைச்சராக போகிறார்.

காவிரி தீர்ப்பை ஏற்க முடியாது என்றால் சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய மூன்றாவது இடத்திலேயே அமர வேண்டியதுதானே.

ஆனால் திரு எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து பாஜக தலைவர் திரு வாஜ்பாய் போலவே பதவியை ராஜினாமா செய்து தனிப்பெரும் முதல் கட்சியாக இருந்தும் ஜனநாயகத்தின் மேல் தன்னுடைய நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளார்.

குமாரசாமியின் இந்த ஆணவ பேச்சுக்கு எதிர்கட்சிகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் காணவில்லை. கருப்பு கொடிகளையும் காணவில்லை.

குமாரசாமியின் பதவியேற்புக்கு ஸ்டாலின் செல்ல போகிறாராம். அப்படிச் சென்றால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். காவிரியில் கருணாநிதியின் துரோகக் கறையே இன்னும் கரையவில்லை. அதை இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக பாஜக போக்குகிறது. முடிந்தால் மோடியைப் பார்த்து நன்றி கூறி விட்டு வரவும்.

இனி கர்நாடகாவில் கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், எந்த துறையாக இருக்கட்டும். மூன்றாம் இடம் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

குமாரசாமி முதல்வரானவுடன் இதுவே அவர் கையெழுத்து இடும் முதல் உத்தரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் குமாரசாமியை முதலமைச்சராக்குவதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறது.

பின்குறிப்பு: – வலைத்தளப் பகிரல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories