குமாரசாமி; குறுக்குப் புத்தி; குறுக்கு வழியில் நாற்காலி!

05 May17 Kumarasaamy - 2026

குறுக்கு வழியில் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க போகும் குமாரசாமி தன் குறுக்கு புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் தமிழ்நாட்டிற்கே வந்து அணைகள் நிரம்பினால் தான் தண்ணீர் திறந்து விடப்படும்.விகிதாசரப்படி எல்லாம் திறந்து விட முடியாது என்கிறார்.

விகிதாசாரம் என்றால் கர்நாடகாவில் மொத்த அணைகளும் நிரம்பினால் 740 TMC நீர் இருப்பு. அப்போது தமிழ் நாட்டிற்கு 177.50 TMC. அதே போல் அணைகளில் 74 TMC இருக்கிறது என்றால் தமிழ்நாட்டிற்கு 17.50 TMC உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் படி திறந்து விட்டே ஆக வேண்டும்.

இப்போதே கர்நாடக அணைகளில் 70 TMC க்கு மேல் நீர் உள்ளது. எனவே மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் ஜூன் மாதம் 10 TMC தண்ணீராவது திறந்து விடப்பட்டே ஆக வேண்டும். காரணம் இந்த வருடம் ஜனவரியில் இருந்து இது வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடப்பட வில்லை. அந்த 70 TMCயையும் கர்நாடகா உபயோகத்திற்கே பயன்படுத்துகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவின்படி அதில் நம்முடைய பங்கை தர மறுத்தது முந்தைய காங்கிரஸ் அரசு. எனவே ஆணையம் மூலமாக இந்த விகிதாசார முறையை உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் பாஜக  மத்திய அரசு வரைவு திட்டத்தில் சேர்த்து தமிழகத்துக்கு நன்மை செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்க முடியாது என்று திருவரங்கத்தில் – தமிழ்நாட்டில் தைரியமாக கூறி செல்கிறார் குமாரசாமி.

ஆனால் இந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவினால்தான் 125 இடங்களில் டெபாசிட் இழந்தும், வெறும் 37 இடங்களில் ஜெயித்து மூன்றாம் இடத்தில் இருந்தும் குறுக்கு புத்தி குமாரசாமி முதலமைச்சராக போகிறார்.

காவிரி தீர்ப்பை ஏற்க முடியாது என்றால் சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய மூன்றாவது இடத்திலேயே அமர வேண்டியதுதானே.

ஆனால் திரு எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து பாஜக தலைவர் திரு வாஜ்பாய் போலவே பதவியை ராஜினாமா செய்து தனிப்பெரும் முதல் கட்சியாக இருந்தும் ஜனநாயகத்தின் மேல் தன்னுடைய நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளார்.

குமாரசாமியின் இந்த ஆணவ பேச்சுக்கு எதிர்கட்சிகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் காணவில்லை. கருப்பு கொடிகளையும் காணவில்லை.

குமாரசாமியின் பதவியேற்புக்கு ஸ்டாலின் செல்ல போகிறாராம். அப்படிச் சென்றால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். காவிரியில் கருணாநிதியின் துரோகக் கறையே இன்னும் கரையவில்லை. அதை இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக பாஜக போக்குகிறது. முடிந்தால் மோடியைப் பார்த்து நன்றி கூறி விட்டு வரவும்.

இனி கர்நாடகாவில் கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், எந்த துறையாக இருக்கட்டும். மூன்றாம் இடம் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

குமாரசாமி முதல்வரானவுடன் இதுவே அவர் கையெழுத்து இடும் முதல் உத்தரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் குமாரசாமியை முதலமைச்சராக்குவதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறது.

பின்குறிப்பு: – வலைத்தளப் பகிரல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories