சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

shyam krishnasamy - 2026

சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்று தனது கோபத்தைக் காட்டி சீறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்.

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவுகள் காரசாரமன விவாதங்களைக் கிளப்பியுள்ளன. அதே நேரம், சாதிக் காழ்ப்பை விதைக்கும் திராவிட அரசியலின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட வரலாற்று பிழைகளுக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டதற்கான உதாரணங்கள் பல உள்ளன. அந்த வகையில் வேளாண் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி., பட்டியலில் சேர்த்து இழைக்கப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பிரிட்டன் தூதரகம் நோக்கி நவ.15 ஆம் தேதி தேவேந்திரர்கள் பேரணி நடத்த உள்ளனர்… என்று தகவலைப் பதிவிட்டிருந்தார் ஷ்யாம்.

இதற்கு பதிலளித்த ஒருவர், அண்ணே இப்ப என்ன வேணும் உனக்கு, நீ SC பட்டியலில் இருக்க வேண்டாம் அம்புட்டு தான, சரி உன்ன தூக்கி FC பட்டியலில் போட்டிடுறோம். இனிமே நீ பூணுல் போட்டுக்கோ, மந்திரம் ஓது, கோவில் கருவறைக்குள் போய் உன் நண்பன் பார்ப்பனன் தோள் மேல் கை போட்டு கடவுளை தரிசி. ஒன்னும் பிரச்சனையில்லை. – என்று பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  மெட்ரோ அரசியல்!

இன்னொருவர், சரிங்க நீங்க கொஞ்சம் சமூக நீதி பகுத்தறிவுன்னா என்னான்னு சொல்லுங்க தேவேந்திர குழ பாப்பானே.. – என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து இருவர் கருத்துக்கும் பதில் சொல்லும் வகையில், சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டி விடுவார்கள்… என்று கூறியிருந்தார் ஷ்யாம்.

பார்ப்பனன் சுயமரியாதையுடன் இருப்பதையும், சுயமரியாதை குறித்து மேடைக்கு மேடை வாய்கிழியப் பேசும் பெரியாரியத்தை முன்வைக்கும் திராவிட இயக்கங்கள் சுயமரியாதை அற்று வீழ்ந்து கிடப்பதையும் இந்தப் பதிவுகளில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் பலர்.

தொடர்ந்து ஷ்யாம் பதிவிட்டுள்ள கருத்துகள்…. அவரது நியாயமான கோபத்தையும் அறச் சீற்றத்தையும் காட்டுவதாக இருந்தது…

நிரந்தரமாக அய்யா சாமி இட ஒதுக்கீடு குடுங்க என கேட்டுக்கொண்டு இருக்கனும். தமிழர்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறவே முடியாது என்று நம்பவைப்பது தான் திராவிட கருத்தியல்.

பூணுல் போடறது, மந்திரம் ஓதுவது, கருவறைக்கு போவது, மத்த சாதி பொண்ணு கட்டுவது, மெல்லிசான தோசை சுடவது…

இவனுங்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு எல்லாம் இவ்வளவு தான். எத்தனை தடவை சொன்னாலும் இதை தாண்டி சிந்திக்கவே முடியல…

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

– என்று கருத்துகளைப் பதிர்ந்து, சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories