சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

shyam krishnasamy - 2026

சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்று தனது கோபத்தைக் காட்டி சீறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்.

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவுகள் காரசாரமன விவாதங்களைக் கிளப்பியுள்ளன. அதே நேரம், சாதிக் காழ்ப்பை விதைக்கும் திராவிட அரசியலின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட வரலாற்று பிழைகளுக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டதற்கான உதாரணங்கள் பல உள்ளன. அந்த வகையில் வேளாண் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி., பட்டியலில் சேர்த்து இழைக்கப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பிரிட்டன் தூதரகம் நோக்கி நவ.15 ஆம் தேதி தேவேந்திரர்கள் பேரணி நடத்த உள்ளனர்… என்று தகவலைப் பதிவிட்டிருந்தார் ஷ்யாம்.

இதற்கு பதிலளித்த ஒருவர், அண்ணே இப்ப என்ன வேணும் உனக்கு, நீ SC பட்டியலில் இருக்க வேண்டாம் அம்புட்டு தான, சரி உன்ன தூக்கி FC பட்டியலில் போட்டிடுறோம். இனிமே நீ பூணுல் போட்டுக்கோ, மந்திரம் ஓது, கோவில் கருவறைக்குள் போய் உன் நண்பன் பார்ப்பனன் தோள் மேல் கை போட்டு கடவுளை தரிசி. ஒன்னும் பிரச்சனையில்லை. – என்று பதிவிட்டிருந்தார்.

இன்னொருவர், சரிங்க நீங்க கொஞ்சம் சமூக நீதி பகுத்தறிவுன்னா என்னான்னு சொல்லுங்க தேவேந்திர குழ பாப்பானே.. – என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து இருவர் கருத்துக்கும் பதில் சொல்லும் வகையில், சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டி விடுவார்கள்… என்று கூறியிருந்தார் ஷ்யாம்.

பார்ப்பனன் சுயமரியாதையுடன் இருப்பதையும், சுயமரியாதை குறித்து மேடைக்கு மேடை வாய்கிழியப் பேசும் பெரியாரியத்தை முன்வைக்கும் திராவிட இயக்கங்கள் சுயமரியாதை அற்று வீழ்ந்து கிடப்பதையும் இந்தப் பதிவுகளில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் பலர்.

தொடர்ந்து ஷ்யாம் பதிவிட்டுள்ள கருத்துகள்…. அவரது நியாயமான கோபத்தையும் அறச் சீற்றத்தையும் காட்டுவதாக இருந்தது…

நிரந்தரமாக அய்யா சாமி இட ஒதுக்கீடு குடுங்க என கேட்டுக்கொண்டு இருக்கனும். தமிழர்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறவே முடியாது என்று நம்பவைப்பது தான் திராவிட கருத்தியல்.

பூணுல் போடறது, மந்திரம் ஓதுவது, கருவறைக்கு போவது, மத்த சாதி பொண்ணு கட்டுவது, மெல்லிசான தோசை சுடவது…

இவனுங்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு எல்லாம் இவ்வளவு தான். எத்தனை தடவை சொன்னாலும் இதை தாண்டி சிந்திக்கவே முடியல…

– என்று கருத்துகளைப் பதிர்ந்து, சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories