10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு பெறும் என்றும், மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப் படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவு பெறும் என்றும், மே.14ஆம் தேதி முடிவுகள் வெளியீடு செய்யப் படும் என்றும் அவர்கூறியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெறும், ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப் படும் என்றார் அவர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும்,
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும்,
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.