December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

பொதுத் தேர்வு: மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வெளியிட்ட கல்வித் துறை!

201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

இது தொடர்பான அறிக்கையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு தேர்வறைக்கு 10 பேர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வர்கள் அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைத்து, தேர்வு எழுத ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதால் மாணவர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத இயலாத 36 ஆயிரத்து 89 தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 18 ஆம் தேதி அவர்கள் ஏற்கெனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளான்று பயன்படுத்தும் வகையில், 46 லட்சத்து 37 ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுமெனவும், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து வரும் மாணவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களை TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரும் மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக 5 தொடர்பு எண்கள் உதவி எண்களாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுமெனவும், தேர்வு நுழைவுச் சீட்டிலும் அச்சடித்து தரப்படுமெனவும், இந்த எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுமெனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories