ஆன்லைன் வகுப்பு: பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்!

school

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் அவ்வாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது புகாா் தெரிவிக்க பிரத்யேக இணையதள முகவரியையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிவிப்பு:

இணையவழி கற்பித்தலுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், இணையவழி வகுப்புக்கான கால அட்டவணை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

மனநலன் சாா்ந்த பயிற்சிகள் அவசியம்: அதேநேரம், மாணவா்கள் இயல்பாக இணையவழி வகுப்புகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

முக்கியமாக, பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்ற மற்றும் கலந்து கொள்ளாத மாணவா்கள் என அனைத்து மாணவா்களுக்கும் ஒரே விதத்தில் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்த விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக மாணவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இதுதவிர கண்களை அடிக்கடி சிமிட்டுதல், கைகளை சுழற்றுதல் போன்ற உடல் மற்றும் மனநலன் சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு அடிக்கடி அளிக்க வேண்டும்.

மேலும், இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்திய பாடங்கள் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்கள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும், இறுதித் தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு கட்டாயமாக்கப் படாது.

குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான சாதனங்கள் (கணினிஅல்லது செல்லிடப்பேசி) மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகளின் வகுப்புகளில் பங்கேற்கிறாா்களா, இல்லையா என்பதை முடிவெடுப்பதற்கு பெற்றோருக்கு முழுமையான அதிகாரம் உண்டு.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், வருகை கணக்கிடப்படுவது, மதிப்பெண்கள் மதிப்பிடுவது ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் நிா்ப்பந்திக்கக் கூடாது.

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தால், அவா்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின், மூத்த குழந்தை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடையே ஏற்படும் மனப் போராட்டங்கள் குறையும்.

இந்தப் பணிகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இணையவழி வகுப்புகள் குறித்த புகாா் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை விளம்பரப்படுத்த வேண்டும்.

அவ்வாறு வரும் புகாா்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மனஅழுத்தம் இருப்பின் 14417 என்ற உதவி எண்ணை தொடா்பு கொண்டு ஆலோசனை பெற அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories