தாய்மொழி வழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவை
பட்ஜெட்டில் 30 சத நிதி கல்வித்துறைக்கு ஒதுக்குக; தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்குழு -உயர்மட்டக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பில் மாநில துணைத் தலைவர் விஜய், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களாவது:
குறைந்த பட்சம் 5 வது வகுப்பு வரை இயன்றால் 8 ம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் மட்டுமே கற்பிக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்
அண்டை மாநிலங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வளர்ந்து வரும் துறைகளின் அறிவைப் பெற 9 ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும்
மொத்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 30% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
போட்டித் தேர்வுகள் இந்திய அளவில் நடைபெறுவதால் NCERT பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதில் தமிழக விழுமியங்களை சேர்க்க வேண்டும்
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடக்கக்கல்வி துறையின் கீழ் நடத்த வேண்டும்
மெக்காலே கல்வி முறையை மாற்றி இந்திய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
விளையாட்டு, நீதி நூல்கள் படித்தல் ஆகியவற்றை தேர்வுடன் கூடிய பாடமாக வைக்க வேண்டும்
ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மட்டுமே கவனிக்கும் வகையில் பிற பணிகளுக்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்
முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து காலிப்பணியிடங்களையும் தேவைப்பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்ப வேண்டும் – என்பது போன்ற பல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது…
இதனை தேசிய ஆசிரியர் சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மு. கந்தசாமி
தெரிவித்தார்.