சென்னை: அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளி நாடுகளில் இருந்து கல்வித்துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசினார். அப்போது அவர், இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பயிற்ச்சி அளிக்க, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கல்வி யாளர்கள் வரவழைக்கப்படுவர். அவர்கள் மூலம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாத கால பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.


