வந்தாச்சு பொங்கல்.. விட்டாச்சு லீவு.. அடேங்கப்பா ஆறு நாட்கள்!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

பொங்கல் வந்துவிட்டது… லீவும் விட்டாச்சு… ஆனால் ஆறு நாட்கள்..! ஆறு நாட்கள் அடேங்கப்பான்னு பார்க்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி அரசு, வரலாற்றில் முதல்முறையாக நீண்ட நாட்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15 மற்றும் 16, 17 தேதிகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு ஜனவரி 14ம் தேதியும் விடுமுறை என அறித்துள்ளது

12 சனிக்கிழமை என்பதால் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய ஆறு நாட்களும் தொடர்ந்து விடுமுறை தினமாக வருகிறது. 14ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை விஷயங்களில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவே முடிவெடுக்காத அதிரடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியூர்களுக்குச் செல்லும் நபர்களின் சந்தோஷத்தை கணக்கில் கொண்டு அறிவித்து வருகிறார்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 5ம் தேதி திங்கட்கிழமை என்பதால் ஒருநாள் கூடுதலாக விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்கள் நான்கு நாட்களானது. பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, ஜாலியாக சென்னைக்குத் திரும்பினர்.

அதுபோல் தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு ஆறு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பண்டிகை விடுமுறை ஓரிரு நாட்கள் என்றிருந்தபோது, சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, சென்னைக்கு அவசர கதியில் திரும்ப வழியின்றி தவித்தனர் பலரும். பஸ், ரயில் கூட்டம் என பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதையே தவிர்த்தனர்! இந்நிலையில் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விரும்பிய நாட்களில் அல்லது கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் ஊருக்குச் சென்று திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories