December 6, 2025, 9:55 AM
26.8 C
Chennai

ஜாக்டோ ஜியோ… கைதுப் படலம் துவங்கியது! நள்ளிரவிலும் நடந்த நாடகங்கள்!

teachers strike - 2025

எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தேடித் தேடி கைது செய்யும் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு. நள்ளிரவிலும் கைதுகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பணிக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்கள் அவ்வாறு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் வேலை, அதில் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இந்நிலையில் கைதுப் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று 4ஆவது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் வளாகத்தின் கதவுகளை மூடினர். ஊழியர்கள் காவல் துறை தடுப்பையும் மீறி காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டபோது, ஆயிரக்கணக்கானோரை காவல் துறை கைது செய்தது.

இந்நிலையில் இரவு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் ரிமாண்ட் செய்த போலீஸார், அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத் தலைவர்களைக் குறி வைத்து ஒரே நேரத்தில் கைது செய்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

வேலூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் 6பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரையும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு இடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories