இங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்!

28. ingitham - 2026

‘பிரபலங்களுக்கு’  ‘பிரபலம்’ என்ற  பட்டம் கொடுத்தது யார்?

நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.

அவர் சொன்ன காரணம்…

ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும்…

அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ லைக் போடவில்லை எனில் அது குறித்தே மனம் யோசனையில் ஆழ்வதாகவும்…

அவர் ஏன் என் பதிவுக்கு லைக் போடாமல் மற்றவர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார்… கமெண்ட் செய்திருக்கிறார் என…

ஒரு பதிவுக்கு பிறகு தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் மனம் அமைதி இழப்பதாகவும் சொன்னார்.

இதைச் சொன்னவரது வயது 65+.

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். ஆனால் லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.

ஃபேஸ்புக் ‘லைக்’ பிரச்சனை எல்லா வயதினருக்குமான ஃபேஸ்புக் சிக் (Facebook Sick). இதற்கான தீர்வு லைக், கமெண்ட்டை எதிர்பார்க்காமல் பதிவு போடுவது நம் கடமை என்ற கர்மயோக மனநிலை.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந்த மன நிலையை பெற முடியாவிட்டால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது ஒன்றே சரியான தீர்வு என எனக்குத் தோன்றியது.

இதைப் பற்றி நான் பதிவிட்டிருந்தேன். அதற்கு நண்பர் ஒருவர்  ‘சில நிஜ பிரபலங்கள் கூட லைக் கமெண்ட் போட்டுவிடுவார்கள்.இந்த பேஸ்புக் பிரபலங்கள் தங்களது ப்ரொமோஷன் தவிர்த்து வேறெங்கும் லைக் போட மாட்டார்கள். இது என்னோட அனுபவம்!’ என தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

யார் பிரபலம்? என நான் யோசித்ததில்…

மனிதர்கள் எல்லோருமே மனிதர்களாக நடந்துகொண்டாலே பிரபலம்தான்.

பிரபலங்கள் அந்தப் பட்டத்தைப் பெற வீட்டில் ஆண் தேவதைகளும் (அப்பா, கணவன், சகோதரன்), பெண் காவல் தெய்வங்களும் (அம்மா, மனைவி, சகோதரிகள்) முட்டுக்கொடுக்க காத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

எழுத்து, பேச்சு, ஓவியம், பாட்டு…  இதெல்லாம் தெரிந்தவர்கள் ‘பிரபலங்கள்’ அல்ல…  இவற்றில் திறமைகள் பெற்றவர்கள். அவ்வளவுதான்.

நம் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறோம். அந்த வகையில் அந்தந்தத் துறைசார்ந்த திறமை பெற்றவர்கள்  தங்கள் திறமையை பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

கம்ப்யூட்டர் புரோகிராமர், அக்கவுண்டண்ட், இன்ஜினியர் இவர்கள் எப்படி தங்கள் புரோகிராமிங் அறிவையும், அக்கவுண்ட்ஸ் திறமையையும், இன்ஜினியரிங் நுணுக்கத்தையும் பயன்படுத்துகிறார்களோ

அதுபோலதான் எழுத்தாளர்கள் எழுத்துத் திறமை, பேச்சாளர்கள் பேசும் திறமை, ஓவியர்கள் வரையும் திறமையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த அடிப்படையை உணர்ந்துகொண்டால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் துறையில் பிரபலமே என்ற பேருண்மை புரியத் தொடங்கும்.

நம் அம்மா, அப்பா, தாத்தா பாட்டி இவர்கள் நம்மை இந்த அளவுக்கு நல்லபடியாக வளர்த்து உருவாக்கி இருக்கிறார்களே அவர்கள் தான் என்னைப் பொருத்தவரை மிக மிக உயர்வானவர்கள். நம் குடும்பத்து பிரபலங்கள்!

நாம் அசட்டுத்தனமாக ‘பிரபலங்களுக்கு’ (?!) பிரபலப் பட்டங்களை தலையில் சுமத்தி அவர்களுக்கு கிரீடம் வைக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும்…. அவர்கள் நார்மலாகி விடுவார்கள்  என நான் நினைக்கிறேன்.

 – காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories