December 5, 2025, 3:45 PM
27.9 C
Chennai

இங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்!

28. ingitham - 2025

‘பிரபலங்களுக்கு’  ‘பிரபலம்’ என்ற  பட்டம் கொடுத்தது யார்?

நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.

அவர் சொன்ன காரணம்…

ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும்…

அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ லைக் போடவில்லை எனில் அது குறித்தே மனம் யோசனையில் ஆழ்வதாகவும்…

அவர் ஏன் என் பதிவுக்கு லைக் போடாமல் மற்றவர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார்… கமெண்ட் செய்திருக்கிறார் என…

ஒரு பதிவுக்கு பிறகு தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் மனம் அமைதி இழப்பதாகவும் சொன்னார்.

இதைச் சொன்னவரது வயது 65+.

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். ஆனால் லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.

ஃபேஸ்புக் ‘லைக்’ பிரச்சனை எல்லா வயதினருக்குமான ஃபேஸ்புக் சிக் (Facebook Sick). இதற்கான தீர்வு லைக், கமெண்ட்டை எதிர்பார்க்காமல் பதிவு போடுவது நம் கடமை என்ற கர்மயோக மனநிலை.

இந்த மன நிலையை பெற முடியாவிட்டால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது ஒன்றே சரியான தீர்வு என எனக்குத் தோன்றியது.

இதைப் பற்றி நான் பதிவிட்டிருந்தேன். அதற்கு நண்பர் ஒருவர்  ‘சில நிஜ பிரபலங்கள் கூட லைக் கமெண்ட் போட்டுவிடுவார்கள்.இந்த பேஸ்புக் பிரபலங்கள் தங்களது ப்ரொமோஷன் தவிர்த்து வேறெங்கும் லைக் போட மாட்டார்கள். இது என்னோட அனுபவம்!’ என தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

யார் பிரபலம்? என நான் யோசித்ததில்…

மனிதர்கள் எல்லோருமே மனிதர்களாக நடந்துகொண்டாலே பிரபலம்தான்.

பிரபலங்கள் அந்தப் பட்டத்தைப் பெற வீட்டில் ஆண் தேவதைகளும் (அப்பா, கணவன், சகோதரன்), பெண் காவல் தெய்வங்களும் (அம்மா, மனைவி, சகோதரிகள்) முட்டுக்கொடுக்க காத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

எழுத்து, பேச்சு, ஓவியம், பாட்டு…  இதெல்லாம் தெரிந்தவர்கள் ‘பிரபலங்கள்’ அல்ல…  இவற்றில் திறமைகள் பெற்றவர்கள். அவ்வளவுதான்.

நம் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறோம். அந்த வகையில் அந்தந்தத் துறைசார்ந்த திறமை பெற்றவர்கள்  தங்கள் திறமையை பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

கம்ப்யூட்டர் புரோகிராமர், அக்கவுண்டண்ட், இன்ஜினியர் இவர்கள் எப்படி தங்கள் புரோகிராமிங் அறிவையும், அக்கவுண்ட்ஸ் திறமையையும், இன்ஜினியரிங் நுணுக்கத்தையும் பயன்படுத்துகிறார்களோ

அதுபோலதான் எழுத்தாளர்கள் எழுத்துத் திறமை, பேச்சாளர்கள் பேசும் திறமை, ஓவியர்கள் வரையும் திறமையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த அடிப்படையை உணர்ந்துகொண்டால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் துறையில் பிரபலமே என்ற பேருண்மை புரியத் தொடங்கும்.

நம் அம்மா, அப்பா, தாத்தா பாட்டி இவர்கள் நம்மை இந்த அளவுக்கு நல்லபடியாக வளர்த்து உருவாக்கி இருக்கிறார்களே அவர்கள் தான் என்னைப் பொருத்தவரை மிக மிக உயர்வானவர்கள். நம் குடும்பத்து பிரபலங்கள்!

நாம் அசட்டுத்தனமாக ‘பிரபலங்களுக்கு’ (?!) பிரபலப் பட்டங்களை தலையில் சுமத்தி அவர்களுக்கு கிரீடம் வைக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும்…. அவர்கள் நார்மலாகி விடுவார்கள்  என நான் நினைக்கிறேன்.

 – காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories