பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள்… நீதிமன்றம் அனுமதி!

chennai pampa - 2026

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே சபரிமலைக்கு மலைப் பாதையில் சிறிய பாதை எனப்படும் குறுகிய தொலைவு பாதை உருவாக்கப் பட்ட பின்னர் பம்பை பகுதி பிரபலம் அடைந்தது.

இதனால் தமிழகத்தின் செங்கோட்டை, குமுளி ஆகிய ஊர்களின் வழியாக பம்பைக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப் பட்டன. இது பிரதான மலைப் பாதை ஆனது. சென்னையில் இருந்தும், செங்கோட்டை பணிமனைகளில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், த.நா. அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த பேருந்துகள் பத்தனம்திட்ட, பம்பை வரை இயக்கப் பட்டன.

sengottai - 2026

இந்நிலையில் திடீரென மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற காரணம் கூறி, பம்பைக்கு பதிலாக அதில் இருந்து 16 கி.மீ. ,தொலைவுக்கு முன் உள்ள நிலக்கல்லில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பம்பைக்கு செல்லும் நிலை உருவானது.

இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் சபரிமலை யாத்திரை சென்ற போது, நிலக்கல்லில் நிறுத்தப் பட்டார். விஐபி வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப் படும் என்றும், உடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீஸார் கூறியதால், மத்திய அமைச்சர் கேரள அரசு பேருந்திலேயே பயணம் செய்தார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கேரள பஸ்கள் செல்லும்போது, அதே பாதையில் ஏன் தமிழக அரசு பஸ்களும் செல்ல முடியாது?! செல்லக் கூடாது என்று கேள்வி முன்வைக்கப் பட்டது. சுற்றுலா வாகனங்கள் வேண்டுமானால் பம்பையில் நெரிசலை ஏற்படுத்தக் கூடும், ஆனால் கேரள பஸ்களைப் போன்று தமிழக அரசு பஸ்களும் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு உடனே திரும்பப் போகின்றன எனும் போது, கேரள அரசு ஏன் அதற்கு தடை விதித்தது என்ற கேள்வி எழுப்ப பட்டது.

இந்நிலையில், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளை, பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பம்பை செல்ல கேரள அரசு பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி அளிக்கப் பட்டுள்ளதால், இனி தமிழக அரசு பேருந்துகள் பம்பை வரை செல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories