December 5, 2025, 4:10 PM
27.9 C
Chennai

தேமுதிக.,வுக்கு 3 போதும் 4 போதும்னு சொல்ல நீங்க யாரு? ஊடகங்களுக்கு விஜயகாந்த் மகன் கேள்வி!

vijayakanth son - 2025

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

நான் எங்க அப்பா முகத்துல காலைல எழுந்து முழிக்கிறேனோ இல்லையோ… எல்லா கட்சிக்காரங்களும் வரிசை கட்டி வந்து எங்கப்பா முன்னாடி நிக்கிறாங்க…

தேமுதிக., ஓஞ்சி போச்சு அப்டின்றாங்க.. ரெண்டு பெர்சண்டு மூனு பெர்சண்டு அப்டின்றாங்க.. இங்க இருக்கற கூட்டத்த பாருங்க. இங்க இருக்கற கூட்டத்த காமிங்க.. ஏதோ விவாத மேடையின்னு உட்கார்ந்து எல்லா டிவிக்கள்லயும் யாரோ நாலு பேரு உக்காந்து பேசறாங்க…

தேமுதிக.,வுக்கு 3 சீட் 4 சீட் போதும்னு பேசிக்கிறாங்க…! நீங்க யாருங்க அதை சொல்லுறதுக்கு! எங்களுக்கு 4 சீட்டு கொடுக்கணும்னு நீங்க யாரு பிக்ஸ் பண்றது!

எங்க வலிமை என்னான்னு எங்களுக்கு தெரியும். அதவிட மத்த கட்சிக்காரங்களுக்கு தெரியுது. அதனால்தான் வந்து நிக்கிறாங்க!

தேமுதிக.,வுக்கு இன்னும் உயிர் இருக்கு. அது எங்க இருக்குன்னா.. தொண்டர்களாகிய உங்ககிட்டதான்.. ! எதுவுமே ஏறி இறங்கும். ஒரே லைன்ல போச்சுன்னா… இறந்துட்டான்னு அர்த்தம்!

அவரு கண் இமைச்சாலே போது\ம்.. சிங்கம் குகைக்குள்ள இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்… கூட்டமா பன்னிங்க சுத்தினாலும் பன்னி பன்னிதான். எங்களை லேசில எடை போடாதீங்க.. இங்கே எத்தனை இளைஞர்கள் பாருங்க! இது இளைஞர்கள் நிறைந்த கட்சி!

தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது.

தேமுதிக., ஓஞ்சி போச்சுன்னு சொல்றவங்க மூஞ்சியெல்லாம் கிழிஞ்சி தொங்கணும்… செய்வீங்களா? செய்வீங்களா?

ஓங்கி கொடுக்கற கட்சி.. ஓஞ்சி போற கட்சி இல்ல.. வரும் தேர்தல்ல கேப்டன் ஆதரவில்தான் ஆட்சி அமையும்! என்று உறுதியிட்டு கூறினார் அவரது மகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories