முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

mukilan rajeswari - 2026

சூழலியல் போராளியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட முகிலன், தன்னை கற்பழித்து விட்டதாக அவருடன் போராட்டக் களத்தில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

சூழலியல் போராளியாகக் காட்டிக் கொண்டவரும், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான முகிலன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக காவிரி மணல் கொள்ளை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும், ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

இந்தப் போராட்டங்களின் போது அவருக்கு துணையாக நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும் உடன் இருந்தார்.

இதனிடையே, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆடியோ வீடியோ ஆதாரங்களை சென்னையில் வெளியிட்ட பின்னர், முகிலன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார், தேர்தல் நேரம் என்பதால் யாராவது அரசியல் சித்து  விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவரே எங்காவது ஒளிந்து கொண்டாரா என்றெல்லாம் அனுமானங்கள் உலவின.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை அடுத்து காணாமல் போனதாகக் கூறப் படும் முகிலன் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டக் காலத்தில் அவருடன் துணையாக நின்ற ராஜேஸ்வரி என்ற பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் போராட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் தன்னைக் கற்பழித்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் புகார் அளித்துள்ளார். அவரது புகாரால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 COMMENT

  1. இப்போதாவது, முகிலனை கைது செய்து, தண்டனை கொடுக்குமா தமிழக அரசு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories