… ஆகவே ஜனநாயகத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் நம்பும் எவரும் காங்கிரஸ் வாழவேண்டும், வல்லமைபெறவேண்டும், நிகரென நின்றிருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்
சரி, அதற்கு ராகுல்தான் ஒரே வழியா? பரம்பரை ஆட்சி அன்றி வேறுவழி இல்லையா? இருக்கும் தலைவர்களில் எவர் தேசமளாவ தெரியப்பட்டிருப்பவர், வட்டார அடையாளங்கள் அற்றவர் என்பதே கேள்வி. அது ராகுல்தான். ஆகவே அவர் தலைவராக இருந்தாகவேண்டும். அவர் தலைவராக இருந்தால் மட்டுமே கட்சியின் தேசிய அடையாளம் நீடிக்கும். கட்சியை நாடெங்கும் தொகுக்கும் மையம் வலுவாக இருக்கும். அப்படித்தான் அக்கட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவே ஒரே வழி.
இந்திய அரசியல்சூழலில் உள்ள சில நடைமுறைக்கூறுகளை நாம் கவனிக்கவேண்டும். இங்கே அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும், மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முடியும்.
அரசாங்கமே மாபெரும் விளம்பரநிறுவனமாக ஆகிவிடுகிறது இங்கே. சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று எண்ணிப்பாருங்கள். ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும் அந்தத் தொகை கிடைக்காது. – எழுத்தாளர் ஜெயமோகன்.
அடடே… என்ன ஆயிற்று ஜெயமோகனுக்கு..? இப்படி பேத்துகிறாரே?