தினசரி ஒரு வேத வாக்கியம்: 27. வாக் சக்தி!

dhinasari veda vakyam

27. வாக் சக்தி.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகம் சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்.

“நிர்துரர்மன்ய ஊர்ஜா மதுமதீ வாக்” -அதர்வணவேதம்.

“நம் பேச்சு சக்தியோடு கூடியதாக, மதுரமாக, துஷ்ட சுபாவம் இல்லாமல் இருக்க வேண்டும்!”

இங்கு பிரதானமாக மூன்று குணங்களை கூறியுள்ளார்கள். சொல் சக்தி உடையதாக இருக்க வேண்டும். அதாவது  நம் பேச்சு எடுபடவேண்டும். கூறிய சொல் உடனே பயனளித்தால் அது  சக்தியோடு கூடிய சொல். இது ஒரு தலைமைப் பண்பு. நம் பேச்சு பிறர்மேல் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

அடுத்து, இனிமையாகப் பேசவேண்டும். நாம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று பிறருக்குத் தோன்ற வேண்டும். செவிக்கு இனிமையாகப் பேசவேண்டும்.

ஊர்ஜா, மதுமதீ இவற்றோடு கூட ‘நிர்துரர்மன்ய‘ என்றார்கள். பேச்சில் தீயகுணம் இருக்கக்கூடாது. சிலர் வெளியில் இனிமையாகப் பேசுவது போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் உள்ளே குத்திக் காட்டுவது போல் இருக்கும். அது வெளிப்பட்டுவிடும். அவ்வாறு இன்றி மனதில் கள்ளமின்றி பேசவேண்டும். பேசுபவரின் மனமும் கேட்பவரின் மனமும் சமரசத்தோடு விளங்கவேண்டும்.

ருஷிகளின் வாக்குகளை நாம் மனனம் செய்தால், நம் சொல் சீர்திருத்தம் பெறும். உள்ளம் தூய்மையடையும். தூய்மையான உள்ளத்தில் ஞானம் தெளிவடையும். சுயநலச் சிந்தனை குறையும். மனம் விசாலமடையும். அவையெல்லாம் சொல்லில் வெளிப்படும். எப்படிப்பட்ட சொல் பேச வேண்டும் என்பது குறித்து வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

படைப்பில் சமமானவர்கள் இடையே நட்பு ஏற்படுகிறது. சமமான அறிவும், சமமான நியமமும் கொண்டு கவனமாக சொற்களை பேசுவோம் என்பது சங்கல்பம். அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவர் நலனை அடுத்தவர்  விரும்புபவராக இருந்தால் அது சமத்துவம் எனப்படும். சமத்துவம் ஏற்பட்டால் கட்டாயம் அடுத்தவரைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது மன்னிக்கும் குணம் கூட ஏற்படும். அதன் மூலம்  சொற்களில் பாதுகாப்பு கிடைக்கும்.

அதனால்தான் பிறரோடு நாம் பேசும் பேச்சு நிச்சயம் அவருக்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அனுமனின் சொற்களைக் கேட்ட இராமபிரான், “லட்சுமணா! இவருடைய பேச்சைக் கேட்டாயா? ஒவ்வொரு சொல்லும் நட்போடு கூடியதாய் உள்ளது” என்று கூறி வியக்கிறான். அதற்கு முன் ராமனுக்கும் அனுமனுக்கும் பரிச்சயம் கிடையாது. அந்த முதல் அறிமுக வாக்கியத்திலேயே சினேக பாவனை மிளிர்ந்தது. நட்போடு உரையாடுவது என்பது ஒரு நல்ல பண்பு.

ப்ரியவாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யத்நி ஜந்தவ:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா
” – என்கிறார் சுபாஷிதக்காரர்.

“பிரியமாகப் பேசினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர் அல்லவா! அதற்கு ஏதாவது செலவாகுமா என்ன? இனிய சொற்களுக்குக் கூடவா தரித்திரம்? ஹாய்யாக பேசுவோமே!” என்கிறார்.

துஷ்ட பிரபாவம் இல்லாததாய், ஸ்னேகத்தோடு கூடியதாய், இனிமையானதாய் சக்தியோடு கூடியதான சொற்களே உண்மையான வாக்கு. அப்படிப்பட்ட வாக்கினைப் பேசும் பண்பாட்டினை கடவுள் நமக்கு அருளட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories