திமுக..? ஆக.28 Vs செப்.5… செயல் Vs புயல்…!

stalin alagiri - 2026

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் திமுக.,வில் அதிகாரத்தைக் கைப்பற்ற இப்போது செயலும் புயலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக.,வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், தன் தந்தையார் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இருந்த போதே, தனக்கான இடத்தை மிக அழுத்தமாக பிடித்துக் கொண்டார். கட்சித் தலைவரால் முன்னிறுத்தப் பட்ட அடுத்த தலைவராக கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்களிடம் பெயரெடுத்தவர் ஸ்டாலின்!

ஒரு காலத்தில் தென் தமிழகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்தவர் மு.க.அழகிரி. அவர் கைகாட்டிய நபர்களே கட்சியில் பதவிகளுக்கு வந்தார்கள். அமைச்சர்களும் ஆனார்கள். ஆனால் அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் அவரை ஓரங்கட்டிய கருணாநிதி, அழகிரி ஆதரவாளர்களை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் தீவிர அரசியலில் இருந்து அழகிரி ஆதரவாளர்கள் ஒதுங்கினர். தொடர்ந்து அழகியும் கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்டு, என் மகனே இல்லை என்று கருணாநிதி சொல்லும் அளவுக்கு சூழ்நிலை மாறிப் போனது.

இப்போது கருணாநிதி உயிருடன் இல்லை. ஆனால் அழகிரியால் ஏற்பட்ட கொந்தளிப்பு மட்டும் உயிருடன் உள்ளது. இப்போது ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அதே நேரம், செப்டம்பர் 5ஆம் தேதி, கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதிப் பேரணியை நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார். இது இன்னொரு மதுரை மாநாடுகளைப் போலவும் இருக்கலாம். அல்லது கலைஞர் திமுக.,வின் உதயமாகவும் இருக்கலாம். ஆனால், திமுக.,வைக் கைப்பற்றுவதே லட்சியம் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுவதால், கலைஞர் திமுக., உதயம் பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

பேரணி குறித்து மு.க.அழகிரி அளித்த பேட்டியில், “சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடத்தும் அமைதிப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், யார் பக்கம் உள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன்” என்று கூறினார். இப்படி ஒருபுறம் அழகிரி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டாலும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார் மு.க.ஸ்டாலின்.

சென்னை அமைதிப் பேரணிக்கு தனது ஆதரவாளர்களைத் திரட்டும் வேலைகளில் அழகிரி இறங்கியுள்ளார். அதே நேரம், இந்தப் பேரணியில் கலந்து கொள்பவர்களை கட்டம் கட்டும் வேலையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

`நீயா.. நானா..?’ என்று செயலும் புயலுமாக இருவரும் களம் இறங்கியிருக்கும் சூழலை, ஆளும் அதிமுக., உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தன் பங்குக்கு ஒரு திரியைப் பற்ற வைத்திருக்கிறார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

முகவரி இல்லாமல் இருக்கும் அழகிரி முதலில் முகவரியை தேடிக் கொள்ளட்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது, அழகிரியைத் தூண்டும் விதமாகத்தான்!

அழகிரி முகவரியை தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் தேர்தலை சந்திக்கட்டும் என்று தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஆர்.பி. உதயகுமார்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

ஆக, அழகிரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வியூகத்தை உடைத்தெறிந்து அவர் வெளிவருவாரா என்பதை இந்த இரு தேதிகளின் நிகழ்வுகளும் தமிழகத்துக்குச் சொல்லும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories