December 5, 2025, 2:43 PM
26.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 29): சாவர்க்கரின் வீர இளமை!

Veer Savarkar - 2025

வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள பாகூர் எனும் இடத்தில் பிறந்தவர். 1910 ஆம் வருடம் அந்தமான் சிறையிலே,50 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க அடைக்கப்பட்டார்.

தன்னுடைய 27 வயதிற்குள்ளாக , அதாவது தான் சுதந்திர மனிதராக இருந்த அந்தக் குறுகியக் காலத்திற்குள், அவர் செய்த சாகசங்கள் தான் எத்தனை எத்தனை..!!

அந்த சிறிதுக் காலத்திற்குள் வாழ்க்கையை அபாய கரமாக வாழ்ந்தார். அவருக்கு 12 வயது இருக்கும் போது, கிராமத்திலே மக்களை மிரட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை, சிறுவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு அடித்து விரட்டினார்.

16 வயது இருக்கும் போது, உயர்நிலைப் படிப்பிற்காக நாஸிக்கில் இருந்த போது, ஆங்கில அரசை தூக்கி எறிய ஒரு புரட்சிகர அமைப்பை துவங்கினார். பள்ளியில் பாடங்களில் என்னவோ குறைந்த மதிப்பெண்கள்தான், ஆனால் தன்னுடைய ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு பாரத சரித்திரமும், சமஸ்கிருத காவியங்களும் அவருக்கு அத்துபடி!

உள்ளூர் நிகழ்ச்சிகளின் போது பாரத சரித்திரம் மற்றும் சம்ஸ்கிருத காவியங்கள் குறித்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிக் பரிட்சையில் தேர்வடைந்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக நாஸிக்கை விட்டு பூனா சென்றார்.

அப்போது ஊரின் பெரிய மனிதர்கள் பலரும் திரண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். பூனாவில் கல்லூரி மாணவராக இருந்த போது, ‘ அரசியல் தொடர்பான கூடுதல்கள்‘ நடைபெற்ற போது,அதில் நடுநாயகமாக விளங்கினார்.

அதன் காரணமாக, அவர் மீது போலீஸின் கண்காணிப்பும் துவங்கியது. அவர் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சுதேசி இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முக்கிய நிகழ்வு, அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு.

அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பின் ஒரு பகுதி அன்னிய, பிடிட்டிஷ் துணிகளை பொது இடங்களில் வைத்து எரிப்பது. இந்த அவரின் செயல்பாடுகள் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல் காரணங்களுக்காக,ஆங்கிலேய அரசால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்ட முதல் மாணவர் ஆனார்.

ஆனாலும்,B.A. பரிட்சைகள் துவங்கியப் போது,பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். பரிட்சையில் தேர்வும் பெற்றார். அதன் பின் அவர் செய்த முதல் காரியம்…

இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் இறங்கியது

( தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories