காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 29): சாவர்க்கரின் வீர இளமை!

Veer Savarkar - 2026

வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள பாகூர் எனும் இடத்தில் பிறந்தவர். 1910 ஆம் வருடம் அந்தமான் சிறையிலே,50 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க அடைக்கப்பட்டார்.

தன்னுடைய 27 வயதிற்குள்ளாக , அதாவது தான் சுதந்திர மனிதராக இருந்த அந்தக் குறுகியக் காலத்திற்குள், அவர் செய்த சாகசங்கள் தான் எத்தனை எத்தனை..!!

அந்த சிறிதுக் காலத்திற்குள் வாழ்க்கையை அபாய கரமாக வாழ்ந்தார். அவருக்கு 12 வயது இருக்கும் போது, கிராமத்திலே மக்களை மிரட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை, சிறுவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு அடித்து விரட்டினார்.

16 வயது இருக்கும் போது, உயர்நிலைப் படிப்பிற்காக நாஸிக்கில் இருந்த போது, ஆங்கில அரசை தூக்கி எறிய ஒரு புரட்சிகர அமைப்பை துவங்கினார். பள்ளியில் பாடங்களில் என்னவோ குறைந்த மதிப்பெண்கள்தான், ஆனால் தன்னுடைய ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு பாரத சரித்திரமும், சமஸ்கிருத காவியங்களும் அவருக்கு அத்துபடி!

உள்ளூர் நிகழ்ச்சிகளின் போது பாரத சரித்திரம் மற்றும் சம்ஸ்கிருத காவியங்கள் குறித்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிக் பரிட்சையில் தேர்வடைந்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக நாஸிக்கை விட்டு பூனா சென்றார்.

அப்போது ஊரின் பெரிய மனிதர்கள் பலரும் திரண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். பூனாவில் கல்லூரி மாணவராக இருந்த போது, ‘ அரசியல் தொடர்பான கூடுதல்கள்‘ நடைபெற்ற போது,அதில் நடுநாயகமாக விளங்கினார்.

அதன் காரணமாக, அவர் மீது போலீஸின் கண்காணிப்பும் துவங்கியது. அவர் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சுதேசி இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முக்கிய நிகழ்வு, அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு.

அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பின் ஒரு பகுதி அன்னிய, பிடிட்டிஷ் துணிகளை பொது இடங்களில் வைத்து எரிப்பது. இந்த அவரின் செயல்பாடுகள் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல் காரணங்களுக்காக,ஆங்கிலேய அரசால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்ட முதல் மாணவர் ஆனார்.

ஆனாலும்,B.A. பரிட்சைகள் துவங்கியப் போது,பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். பரிட்சையில் தேர்வும் பெற்றார். அதன் பின் அவர் செய்த முதல் காரியம்…

இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் இறங்கியது

( தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories