காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 29): சாவர்க்கரின் வீர இளமை!

Veer Savarkar - 2026

வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள பாகூர் எனும் இடத்தில் பிறந்தவர். 1910 ஆம் வருடம் அந்தமான் சிறையிலே,50 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க அடைக்கப்பட்டார்.

தன்னுடைய 27 வயதிற்குள்ளாக , அதாவது தான் சுதந்திர மனிதராக இருந்த அந்தக் குறுகியக் காலத்திற்குள், அவர் செய்த சாகசங்கள் தான் எத்தனை எத்தனை..!!

அந்த சிறிதுக் காலத்திற்குள் வாழ்க்கையை அபாய கரமாக வாழ்ந்தார். அவருக்கு 12 வயது இருக்கும் போது, கிராமத்திலே மக்களை மிரட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை, சிறுவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு அடித்து விரட்டினார்.

16 வயது இருக்கும் போது, உயர்நிலைப் படிப்பிற்காக நாஸிக்கில் இருந்த போது, ஆங்கில அரசை தூக்கி எறிய ஒரு புரட்சிகர அமைப்பை துவங்கினார். பள்ளியில் பாடங்களில் என்னவோ குறைந்த மதிப்பெண்கள்தான், ஆனால் தன்னுடைய ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு பாரத சரித்திரமும், சமஸ்கிருத காவியங்களும் அவருக்கு அத்துபடி!

உள்ளூர் நிகழ்ச்சிகளின் போது பாரத சரித்திரம் மற்றும் சம்ஸ்கிருத காவியங்கள் குறித்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிக் பரிட்சையில் தேர்வடைந்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக நாஸிக்கை விட்டு பூனா சென்றார்.

அப்போது ஊரின் பெரிய மனிதர்கள் பலரும் திரண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். பூனாவில் கல்லூரி மாணவராக இருந்த போது, ‘ அரசியல் தொடர்பான கூடுதல்கள்‘ நடைபெற்ற போது,அதில் நடுநாயகமாக விளங்கினார்.

அதன் காரணமாக, அவர் மீது போலீஸின் கண்காணிப்பும் துவங்கியது. அவர் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சுதேசி இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முக்கிய நிகழ்வு, அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு.

அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பின் ஒரு பகுதி அன்னிய, பிடிட்டிஷ் துணிகளை பொது இடங்களில் வைத்து எரிப்பது. இந்த அவரின் செயல்பாடுகள் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசியல் காரணங்களுக்காக,ஆங்கிலேய அரசால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்ட முதல் மாணவர் ஆனார்.

ஆனாலும்,B.A. பரிட்சைகள் துவங்கியப் போது,பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். பரிட்சையில் தேர்வும் பெற்றார். அதன் பின் அவர் செய்த முதல் காரியம்…

இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் இறங்கியது

( தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories