காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 59): உண்ணாவிரத மிரட்டல்!

gandhifeatured1 - 2026

ஹிந்துக்கள் மிகச் சிறிய சிறுபான்மையினராக வாழ்ந்த நவகாளிக்கும், திப்பேராவிற்கும் முஸ்லீம் லீக் தனது களத்தை மாற்றியது. அங்கே ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஜிஹாத் என்னும் கொலைவெறித் தாக்குதல் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட இயலாத ஒன்று.

கூட்டங்கூட்டமாகக் கொலை, மதமாற்றம், கற்பழிப்பு, கடத்தல், ஹிந்துப் பெண்ணை முஸ்லீம் ஆணுக்கு கட்டாயமாக மணமுடித்தல் என படுபாதகச் செயல்கள் வாரக் கணக்கில் தொடர்ந்து நடந்தன.

கிழக்கு வங்காள கிராமம் ஒன்றிலிருந்த நிவாரண மையத்திலிருந்து, 1946 நவம்பர் 6ம் தேதி மிஸ். மியூரியல் லெஸ்டர் என்பவர் எழுதினார் :

’’ பெண்களின் நிலையே அனைத்திலும் மிகப் பரிதாபத்திற்குரியது. தங்கள் கணவர்கள் தங்கள் கண் முன்னாலேயே கொல்லப்படும் கொடூரத்தைக் காணும் கொடுமை, கணவனின் கொலைக்குப் பொறுப்பானவர்களில் ஒருவனுக்கே கட்டாயத் திருமணம் செய்விக்கப்படும் கொடுமை. அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டிறைச்சி உண்ணச் சொல்வது…

ஆச்சார்யா கிருபளானி தன் மனைவி சுசேதா கிருபளானி ,பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற போது, சுசேதா அம்மையார் தன் கையில் சைனைட் விஷம் வைத்திருந்தார். தன்னிடம் முஸ்லீம் வெறியாளர்கள் முறை தவறி நடந்தால் அங்கேயே அதை சாப்பிட்டு விடுவதற்கு.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுவதை, முஸ்லீம் கவர்னர் எஃப் பர்ரோஸிடம் ஆச்சார்யா கிருபளானி சுட்டிக் காட்டிய பொழுது, முஸ்லீம்களைக் காட்டிலும் ஹிந்துப் பெண்கள் அழகாக இருப்பதால் இதுபோல நடக்கிறது என்று அகம்பாவத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட கிருபளானிக்கு ‘’அவரைப் பளாரென அறையலாம் போலிருந்தது‘’ என்று பதிவு செய்திருக்கிறார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன் முதலில் போய் ஹிந்துக்களின் தற்காப்பு அமைப்பைப் பலப்படுத்தி உதவி புரிந்தவர், பின்னாளில் பாரதிய ஜனசங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆவார்.

பின்னர் காந்தியும் கூட அமைதி ஏற்படுத்த அங்கு வந்திருந்தார். ஆனால் அவரைச் சந்தித்த ஹிந்துக்கள் கொதித்துப் போய் அவரிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன் பேசினர். கல்கத்தாவிற்கு நடந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிகாரில் பெரும்பான்மையாக இருந்த ஹிந்துக்கள் முஸ்லீம்களை துவைத்து எடுத்தனர்.

கல்கத்தாவிலும், வங்கத்தின் இதர பகுதிகளிலும் ஹிந்துக்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் நடந்தனவோ அதற்கு சரியான அளவுக்கு முஸ்லீம்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்கள் பீகார் வாழ் ஹிந்துக்கள்.

வங்கக் கலவரத்தின் போது, அங்கே ஜீவாதாரத்திற்காக சென்றிருந்த பீகாரி ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதே பீகாரில் கலவரம் வெடிக்க முக்கியக் காரணம். பீகார் வாழ் முஸ்லீம்களை காப்பாற்ற காந்தி அங்கே ஓடோடி வந்தார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மிரட்டினார்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories