காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 59): உண்ணாவிரத மிரட்டல்!

gandhifeatured1 - 2026

ஹிந்துக்கள் மிகச் சிறிய சிறுபான்மையினராக வாழ்ந்த நவகாளிக்கும், திப்பேராவிற்கும் முஸ்லீம் லீக் தனது களத்தை மாற்றியது. அங்கே ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஜிஹாத் என்னும் கொலைவெறித் தாக்குதல் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட இயலாத ஒன்று.

கூட்டங்கூட்டமாகக் கொலை, மதமாற்றம், கற்பழிப்பு, கடத்தல், ஹிந்துப் பெண்ணை முஸ்லீம் ஆணுக்கு கட்டாயமாக மணமுடித்தல் என படுபாதகச் செயல்கள் வாரக் கணக்கில் தொடர்ந்து நடந்தன.

கிழக்கு வங்காள கிராமம் ஒன்றிலிருந்த நிவாரண மையத்திலிருந்து, 1946 நவம்பர் 6ம் தேதி மிஸ். மியூரியல் லெஸ்டர் என்பவர் எழுதினார் :

’’ பெண்களின் நிலையே அனைத்திலும் மிகப் பரிதாபத்திற்குரியது. தங்கள் கணவர்கள் தங்கள் கண் முன்னாலேயே கொல்லப்படும் கொடூரத்தைக் காணும் கொடுமை, கணவனின் கொலைக்குப் பொறுப்பானவர்களில் ஒருவனுக்கே கட்டாயத் திருமணம் செய்விக்கப்படும் கொடுமை. அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டிறைச்சி உண்ணச் சொல்வது…

ஆச்சார்யா கிருபளானி தன் மனைவி சுசேதா கிருபளானி ,பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற போது, சுசேதா அம்மையார் தன் கையில் சைனைட் விஷம் வைத்திருந்தார். தன்னிடம் முஸ்லீம் வெறியாளர்கள் முறை தவறி நடந்தால் அங்கேயே அதை சாப்பிட்டு விடுவதற்கு.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுவதை, முஸ்லீம் கவர்னர் எஃப் பர்ரோஸிடம் ஆச்சார்யா கிருபளானி சுட்டிக் காட்டிய பொழுது, முஸ்லீம்களைக் காட்டிலும் ஹிந்துப் பெண்கள் அழகாக இருப்பதால் இதுபோல நடக்கிறது என்று அகம்பாவத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட கிருபளானிக்கு ‘’அவரைப் பளாரென அறையலாம் போலிருந்தது‘’ என்று பதிவு செய்திருக்கிறார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன் முதலில் போய் ஹிந்துக்களின் தற்காப்பு அமைப்பைப் பலப்படுத்தி உதவி புரிந்தவர், பின்னாளில் பாரதிய ஜனசங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆவார்.

பின்னர் காந்தியும் கூட அமைதி ஏற்படுத்த அங்கு வந்திருந்தார். ஆனால் அவரைச் சந்தித்த ஹிந்துக்கள் கொதித்துப் போய் அவரிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன் பேசினர். கல்கத்தாவிற்கு நடந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிகாரில் பெரும்பான்மையாக இருந்த ஹிந்துக்கள் முஸ்லீம்களை துவைத்து எடுத்தனர்.

கல்கத்தாவிலும், வங்கத்தின் இதர பகுதிகளிலும் ஹிந்துக்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் நடந்தனவோ அதற்கு சரியான அளவுக்கு முஸ்லீம்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்கள் பீகார் வாழ் ஹிந்துக்கள்.

வங்கக் கலவரத்தின் போது, அங்கே ஜீவாதாரத்திற்காக சென்றிருந்த பீகாரி ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதே பீகாரில் கலவரம் வெடிக்க முக்கியக் காரணம். பீகார் வாழ் முஸ்லீம்களை காப்பாற்ற காந்தி அங்கே ஓடோடி வந்தார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மிரட்டினார்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories